முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படமும்…! (3)


சென்னையில், நான் எதிர்கொண்ட கேள்விக்கான பதில், மேல் கூறிய என் வாழ்க்கை அனுபவத்தில் இருக்கிறது என்பதை நீங்களும் நானும் புரிந்துக்கொள்ளலாம்தான். ஆயினும், அக்கேள்வி இன்னும்  ஆழமானது என்பதாக உணர்கிறேன். அதற்கான பதிலை அக்கேள்வியை எதிர்கொண்ட பிறகே தேடத்துவங்கினேன். அத்தேடல் என் பால்ய காலம் வரை நீண்டு சென்றது என்பதுதான் ஆச்சரியம்.


நான் ஏன் ஒளிப்பதிவாளனாக வேண்டும்..? எனக்கு ஏன் ஒளிப்பதிவு பிடித்தது..?” இதுதான் ஆதாரக்கேள்வி.


ஏன் என்றால் எனக்கு திரைப்படங்கள் பிடிக்கும். சரி.. திரைப்படங்கள் பிடிக்குமென்றால் இயக்குநராகவோ, நடிகனாகவோ, பாடலாசிரியராகவோ, இசையமைப்பாளனாகவோ, கதை வசனகர்த்தாகவோ அல்லவா முயன்று இருக்கவேண்டும்..! அதை எல்லாம் விடுத்து, ஏன் ஒளிப்பதிவாளனாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது..!? இதற்கான பதில், என் பால்யத்திலிருந்து என்னைத் தொடர்ந்துகொண்டிருப்பதை உணர்ந்து கொண்டேன்


சிறுவயதில் நான் படித்த காமிக்ஸ் புத்தகங்கள், அதன் உந்துதலில் வரைதல் என்ற பெயரில் கிறுக்கிய கோடுகள், குடும்ப விழாக்களில் புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம், புகைப்படம் எடுக்கப்படுவதை விட, எடுப்பதில் காட்டிய ஆர்வம் என அதன் வேர்கள் எங்கோ பரவி விரிந்து கிடப்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது


படம் பார்த்து கதை சொல்லும் அச்சிறுவயது ஆர்வமும், பரவசமும் தான் பிற்காலத்தில் காட்சிகளின் மீதும் பிம்பங்களின் மீது ஆர்வத்தை தூண்டியன என்பதை யோசித்துப் புரிந்துக்கொள்ள முடிகிறது. மேலும், இசையின் மீதிருந்த ஆர்வம், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம், பயணங்கள் மீதிருந்த ஆர்வம் என பல காரணிகள் இருக்கின்றன, நான் ஏன் ஒளிப்பதிவுத்துறையைத் தேர்ந்தெடுத்தேன் என்பதற்கு.


பின்பு, அக்கேள்வியை எதிர்கொண்ட போதெல்லாம் என் பதில் இப்படியாக இருந்தது..


ஏன் என்றால்.. எனக்கு காமிக்ஸ் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு ஓவியம் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு புகைப்படங்கள் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு இசை பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு புத்தகங்கள் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு பயணங்கள் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு திரைப்படங்கள் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு அழகு பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு கனவு பிடிக்கும்


உண்மையில், ஓர் ஒளிப்பதிவாளனாக இருப்பதற்கு ரசனையே அடிப்படை


ரசிக்கும் தன்மையே உங்களை ஒரு படைப்பாளியாக மாற்றும்


சக உயிர்களின் மீதான அன்பும், கருணையுமே உங்களை மனிதனாக மாற்றும்


அன்பும், கருணையும் உங்கள் ஆத்மாவோடு தொடர்புடையவை, ரசனையும், அழகுணர்ச்சியும் உங்கள் மனதோடு தொடர்புடையவை, அறவுணர்ச்சியும், சுய ஒழுக்கமும் உங்கள் நேர்மையோடு தொடர்புடையவை…!


அழகும் கற்பனைனையும் இணையும் போது படைப்பு பிறக்கிறது. அதோடு மனிதமும், அறமும் இணையும் போது கலைப் பிறக்கிறது


(தொடரும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...