முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படமும்…! (3)


சென்னையில், நான் எதிர்கொண்ட கேள்விக்கான பதில், மேல் கூறிய என் வாழ்க்கை அனுபவத்தில் இருக்கிறது என்பதை நீங்களும் நானும் புரிந்துக்கொள்ளலாம்தான். ஆயினும், அக்கேள்வி இன்னும்  ஆழமானது என்பதாக உணர்கிறேன். அதற்கான பதிலை அக்கேள்வியை எதிர்கொண்ட பிறகே தேடத்துவங்கினேன். அத்தேடல் என் பால்ய காலம் வரை நீண்டு சென்றது என்பதுதான் ஆச்சரியம்.


நான் ஏன் ஒளிப்பதிவாளனாக வேண்டும்..? எனக்கு ஏன் ஒளிப்பதிவு பிடித்தது..?” இதுதான் ஆதாரக்கேள்வி.


ஏன் என்றால் எனக்கு திரைப்படங்கள் பிடிக்கும். சரி.. திரைப்படங்கள் பிடிக்குமென்றால் இயக்குநராகவோ, நடிகனாகவோ, பாடலாசிரியராகவோ, இசையமைப்பாளனாகவோ, கதை வசனகர்த்தாகவோ அல்லவா முயன்று இருக்கவேண்டும்..! அதை எல்லாம் விடுத்து, ஏன் ஒளிப்பதிவாளனாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது..!? இதற்கான பதில், என் பால்யத்திலிருந்து என்னைத் தொடர்ந்துகொண்டிருப்பதை உணர்ந்து கொண்டேன்


சிறுவயதில் நான் படித்த காமிக்ஸ் புத்தகங்கள், அதன் உந்துதலில் வரைதல் என்ற பெயரில் கிறுக்கிய கோடுகள், குடும்ப விழாக்களில் புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம், புகைப்படம் எடுக்கப்படுவதை விட, எடுப்பதில் காட்டிய ஆர்வம் என அதன் வேர்கள் எங்கோ பரவி விரிந்து கிடப்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது


படம் பார்த்து கதை சொல்லும் அச்சிறுவயது ஆர்வமும், பரவசமும் தான் பிற்காலத்தில் காட்சிகளின் மீதும் பிம்பங்களின் மீது ஆர்வத்தை தூண்டியன என்பதை யோசித்துப் புரிந்துக்கொள்ள முடிகிறது. மேலும், இசையின் மீதிருந்த ஆர்வம், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம், பயணங்கள் மீதிருந்த ஆர்வம் என பல காரணிகள் இருக்கின்றன, நான் ஏன் ஒளிப்பதிவுத்துறையைத் தேர்ந்தெடுத்தேன் என்பதற்கு.


பின்பு, அக்கேள்வியை எதிர்கொண்ட போதெல்லாம் என் பதில் இப்படியாக இருந்தது..


ஏன் என்றால்.. எனக்கு காமிக்ஸ் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு ஓவியம் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு புகைப்படங்கள் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு இசை பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு புத்தகங்கள் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு பயணங்கள் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு திரைப்படங்கள் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு அழகு பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு கனவு பிடிக்கும்


உண்மையில், ஓர் ஒளிப்பதிவாளனாக இருப்பதற்கு ரசனையே அடிப்படை


ரசிக்கும் தன்மையே உங்களை ஒரு படைப்பாளியாக மாற்றும்


சக உயிர்களின் மீதான அன்பும், கருணையுமே உங்களை மனிதனாக மாற்றும்


அன்பும், கருணையும் உங்கள் ஆத்மாவோடு தொடர்புடையவை, ரசனையும், அழகுணர்ச்சியும் உங்கள் மனதோடு தொடர்புடையவை, அறவுணர்ச்சியும், சுய ஒழுக்கமும் உங்கள் நேர்மையோடு தொடர்புடையவை…!


அழகும் கற்பனைனையும் இணையும் போது படைப்பு பிறக்கிறது. அதோடு மனிதமும், அறமும் இணையும் போது கலைப் பிறக்கிறது


(தொடரும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,