முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கூழாங்கல்: திரைப்படத்தை முன்வைத்து (01)


திரைப்படங்களில்
இரண்டு வகை உண்டு. ஒன்று அடிதடி, ஆட்டம் பாட்டம் கொண்ட வெகுசன பொழுதுப்போக்கு சினிமா. இரண்டாவது, கலைப்படங்கள் என்று அழைப்படும் வாழ்வியலைப் பேசும் படங்கள். இவை இரண்டுக்கும் ஆதாரமாக ஒரு வித்தியாசம் இருக்கிறது, அது சுவாரசியம்

வெகுசன பொழுதுப்போக்குத் திரைப்படங்களில் இருக்கும் கதைவோட்டம், பார்வையாளனை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகவேதிட்டமிட்டுஅமைப்படும் காட்சிகள், வசனங்கள், பாடல்கள், சண்டைக்காட்சிகள், நடிகர் நடிகை தேர்வுகள், காட்சியமைப்புகள்,படத்தொகுப்பு, இசை போன்றவை ஒரு கலைப்படத்தில் இருப்பதில்லை. அது நேரடியாக சொல்லவந்த கதையை மட்டும் சொல்கின்றன. வேறெதைப்பற்றியும் சிந்திப்பதில்லை அல்லது முக்கியத்துவம் கொடுப்பதில்லை.


இவை இருண்டுப்படங்களை, இலகுவாக இப்படி புரிந்துக்கொள்ளல்லாம்.


வெகுசன சினிமா

கதைமட்டும் போதாது, அதை சுற்றி அமைக்கப்படும் ஜனரஞ்சகமானமேக் அப் / பேக்கேஜ்அவசியம்

பிரதான நோக்கம்: பார்வையாளனை மகிழ்விப்பது.


கலைப்படங்கள்

கதையும், அது பேசும் வாழ்வியலும், அரசியலும் மட்டுமே முக்கியம். மேல் பூச்சு அல்ல.

பிரதான நோக்கம்: வாழ்வை பிரதிபலிப்பது. குறிப்பாக வாழ்வின் துயரை பேசும் பொருளாக்குவது.


எனில், இவை இரண்டும் ஒன்றிணைய முடியாதா?


ஏன் ஒரு வெகுசன சினிமாவில் வாழ்கையைப் பேசமுடியாதா? கூடாதா? ; ஒரு கலைப்படம், சுவாரசியமானதாக இருக்க கூடாதா?


இந்தக்கேள்விகளுக்கு நம்முடைய திரைப்படங்கள் ஏதும் பதில் சொல்லியிருக்கின்றனவா? இருக்கின்றன.


(சும்மா புரிதலுக்காக என் நினைவிலிருந்து எழுதுகிறேன்) வீடு, மூன்றாம்பிறை, சந்தியாராகம், உதிரிப்பூக்கள், முல்லும் மலரும், மௌனராகம், பதினாறு வயதினிலே, மண்வாசனை, தண்ணீர் தண்ணீர், பாசமலர், பொற்காலம், அஞ்சாதே, காதல், வழக்கு எண் 18/9, தேவர்மகன், மகாநதி என்று பலப்படங்கள் இந்த லிஸ்டில் வரும். அண்மைக்காலங்கள் வந்தமேற்கு தொடர்ச்சி மலை, டூலெட், ஜோக்கர், காக்கா முட்டை, கடைசி விவசாயி, தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, தங்கமீன்கள், விசாரனை, மெட்ராஸ், பரியேறும் பெருமாள், அறம் போன்றப்படங்களைச் சொல்லலாம்.


இப்படங்களில், அழுத்தமாக ஒரு வாழ்வை, சூழலை எதார்த்தம் மீறாமல் பதிவுசெய்யப்பட்டிருக்கும், கூடவே பார்வையாளனை மகிழ்விக்க, கதையை மேலும் சுவாரசியமாக்கத் தேவையான நடிகர்த்தேர்வு, பாடல், இசை, சண்டைக்காட்சிகள் போன்றவைகளும் இணைக்கப்பட்டிருக்கும். அப்போதுதான் அது, பெரும்வாரியான பார்வையாளனை சென்று சேர்கிறது.


ஒரு திரைப்படத்தின் ஆதாரமான நோக்கம் என்ன? பெருவாரியான பார்வையாளனை சென்று அடைவது தானே


அப்படியெல்லாம் இல்லை. பார்த்தா பார்க்கிறார்கள், இல்லனா விடுஎன்ற நோக்கத்தில் ஒரு திரைப்படத்தை எடுக்க முடியுமா? எனக்கு தெரிந்து பார்வையாளனை, வாசகனை மறுதலித்துவிட்டு எந்த படைப்பும், கலையும் இருக்க முடியாது


கலையின் ஆதார நோக்கமே, அது பரவலாக சென்று சேர வேண்டும் என்பதுதான், எனில் அதற்கான முயற்சிகள் செய்வது எவ்வகையில், அப்படைப்பின் தரத்தை கீழ் இறக்கிவிடுபவையாக அவை இருக்க முடியும்?


அத்தகைய முயற்சிகளை சமரசங்கள் என்று ஏன் அழைக்கிறோம்? கூடுதல் பலம் என்றுதானே புரிந்துக்கொள்ள வேண்டும்


ஆனால், சினிமா விமர்சகர்கள், ஆர்வலர்கள் அப்படி நினைப்பதில்லைஅவர்களுடைய பார்வை வேறாக இருக்கிறது.


தொடர்ந்து பேசுவோம்


(தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,