முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கூழாங்கல்: திரைப்படத்தை முன்வைத்து (01)


திரைப்படங்களில்
இரண்டு வகை உண்டு. ஒன்று அடிதடி, ஆட்டம் பாட்டம் கொண்ட வெகுசன பொழுதுப்போக்கு சினிமா. இரண்டாவது, கலைப்படங்கள் என்று அழைப்படும் வாழ்வியலைப் பேசும் படங்கள். இவை இரண்டுக்கும் ஆதாரமாக ஒரு வித்தியாசம் இருக்கிறது, அது சுவாரசியம்

வெகுசன பொழுதுப்போக்குத் திரைப்படங்களில் இருக்கும் கதைவோட்டம், பார்வையாளனை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகவேதிட்டமிட்டுஅமைப்படும் காட்சிகள், வசனங்கள், பாடல்கள், சண்டைக்காட்சிகள், நடிகர் நடிகை தேர்வுகள், காட்சியமைப்புகள்,படத்தொகுப்பு, இசை போன்றவை ஒரு கலைப்படத்தில் இருப்பதில்லை. அது நேரடியாக சொல்லவந்த கதையை மட்டும் சொல்கின்றன. வேறெதைப்பற்றியும் சிந்திப்பதில்லை அல்லது முக்கியத்துவம் கொடுப்பதில்லை.


இவை இருண்டுப்படங்களை, இலகுவாக இப்படி புரிந்துக்கொள்ளல்லாம்.


வெகுசன சினிமா

கதைமட்டும் போதாது, அதை சுற்றி அமைக்கப்படும் ஜனரஞ்சகமானமேக் அப் / பேக்கேஜ்அவசியம்

பிரதான நோக்கம்: பார்வையாளனை மகிழ்விப்பது.


கலைப்படங்கள்

கதையும், அது பேசும் வாழ்வியலும், அரசியலும் மட்டுமே முக்கியம். மேல் பூச்சு அல்ல.

பிரதான நோக்கம்: வாழ்வை பிரதிபலிப்பது. குறிப்பாக வாழ்வின் துயரை பேசும் பொருளாக்குவது.


எனில், இவை இரண்டும் ஒன்றிணைய முடியாதா?


ஏன் ஒரு வெகுசன சினிமாவில் வாழ்கையைப் பேசமுடியாதா? கூடாதா? ; ஒரு கலைப்படம், சுவாரசியமானதாக இருக்க கூடாதா?


இந்தக்கேள்விகளுக்கு நம்முடைய திரைப்படங்கள் ஏதும் பதில் சொல்லியிருக்கின்றனவா? இருக்கின்றன.


(சும்மா புரிதலுக்காக என் நினைவிலிருந்து எழுதுகிறேன்) வீடு, மூன்றாம்பிறை, சந்தியாராகம், உதிரிப்பூக்கள், முல்லும் மலரும், மௌனராகம், பதினாறு வயதினிலே, மண்வாசனை, தண்ணீர் தண்ணீர், பாசமலர், பொற்காலம், அஞ்சாதே, காதல், வழக்கு எண் 18/9, தேவர்மகன், மகாநதி என்று பலப்படங்கள் இந்த லிஸ்டில் வரும். அண்மைக்காலங்கள் வந்தமேற்கு தொடர்ச்சி மலை, டூலெட், ஜோக்கர், காக்கா முட்டை, கடைசி விவசாயி, தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, தங்கமீன்கள், விசாரனை, மெட்ராஸ், பரியேறும் பெருமாள், அறம் போன்றப்படங்களைச் சொல்லலாம்.


இப்படங்களில், அழுத்தமாக ஒரு வாழ்வை, சூழலை எதார்த்தம் மீறாமல் பதிவுசெய்யப்பட்டிருக்கும், கூடவே பார்வையாளனை மகிழ்விக்க, கதையை மேலும் சுவாரசியமாக்கத் தேவையான நடிகர்த்தேர்வு, பாடல், இசை, சண்டைக்காட்சிகள் போன்றவைகளும் இணைக்கப்பட்டிருக்கும். அப்போதுதான் அது, பெரும்வாரியான பார்வையாளனை சென்று சேர்கிறது.


ஒரு திரைப்படத்தின் ஆதாரமான நோக்கம் என்ன? பெருவாரியான பார்வையாளனை சென்று அடைவது தானே


அப்படியெல்லாம் இல்லை. பார்த்தா பார்க்கிறார்கள், இல்லனா விடுஎன்ற நோக்கத்தில் ஒரு திரைப்படத்தை எடுக்க முடியுமா? எனக்கு தெரிந்து பார்வையாளனை, வாசகனை மறுதலித்துவிட்டு எந்த படைப்பும், கலையும் இருக்க முடியாது


கலையின் ஆதார நோக்கமே, அது பரவலாக சென்று சேர வேண்டும் என்பதுதான், எனில் அதற்கான முயற்சிகள் செய்வது எவ்வகையில், அப்படைப்பின் தரத்தை கீழ் இறக்கிவிடுபவையாக அவை இருக்க முடியும்?


அத்தகைய முயற்சிகளை சமரசங்கள் என்று ஏன் அழைக்கிறோம்? கூடுதல் பலம் என்றுதானே புரிந்துக்கொள்ள வேண்டும்


ஆனால், சினிமா விமர்சகர்கள், ஆர்வலர்கள் அப்படி நினைப்பதில்லைஅவர்களுடைய பார்வை வேறாக இருக்கிறது.


தொடர்ந்து பேசுவோம்


(தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,