முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கூழாங்கல்: திரைப்படத்தை முன்வைத்து (02)




படைப்பாளிகளைப்போலவே, சினிமா ஆர்வலர்களும், விமர்சகர்களும் இரண்டு வகையாக பிரிந்திருக்கிறார்கள். வெகுசன சினிமாவையும் கொண்டாடுவது, நாயகத்துதி, கேளிக்கை சமாச்சாரங்களை உயர்த்தி பேசுவது, விரும்புவது ஒருபுறமும், உலகசினிமா, கலைப்படைப்பு போன்றவற்றையும் ஆதரித்து பேசுவது என்று ஒரு சாராரும், அதெல்லாம் இல்லை, திரைப்படம் என்றால் அது கலைப்படங்கள்தாம், அதுவே உயர்ந்தக்கலை என்று பேசுபவர்களும், செயல்படுபவர்களும் இங்கே உண்டு. இருக்கலாம் தவறில்லை. பிரியாணியும் பிடிக்கும், கம்மங்கூழும் பிடிக்கும். அதிலென்ன தவறு.


கலைப்படைப்பு என்பது, வாழ்வியலை முன்னிறுத்த வேண்டும், அது தெளிந்த நீராக, கலப்படம் அற்ற உணவாக, நோயை தீர்க்கும் மருந்தாக, இருட்டில் ஏற்றப்படும் சிறு தீபமாக இருந்தல் வேண்டும் என்பது பொதுவான விருப்பம். அது முறையானது கூடத்தான். அதன் அடிப்படையில்தாம் ஒரு கலைப்படைப்பை ஏற்கிறோம் அல்லது நிராகரிக்கிறோம்


எனில் எது நல்லப்படம்


வாழ்வியலைப்பேசுவது, அரசியல்பேசுவது, எதார்த்தமாக இருப்பது, வன்முறையற்று, ஆபாசமற்ற, கெடுதலைப் போதிக்காமல் நன்மையை, தீமையை பிரித்துக்காட்டுவது என்று சொல்லிக்கொண்டே போகலாம். சரி இதெல்லாம் இருந்துவிட்டால், அது நல்லப்படமாகிவிடுமா?


பாலுமகேந்திரா ஒருமுறை சொன்னார், நல்லப்படம் என்பதுதாயின் உணவைப்போல இருக்கவேண்டும்’. 


பிள்ளையின் தேவையறிந்து, அன்போடு, பக்குவத்தோடு, சுவையோடு, தரத்தோடு இருத்தல் வேண்டும். ஆதார நோக்கம் பிள்ளையின் பசியாற்றுதல், உடலுக்கு தேவையான சக்தியைக்கொடுத்தல் என்பதுதான். கூடவே அது தரமானதாக, சுவையானதாக, கெடுதல் அற்றதாக இருக்கிறதா என்பதைப் பார்த்துதான் ஒரு தாய், தன் சேய்க்கு உணவு ஊட்டுகிறாள். திரைப்படமும் அப்படித்தான் இருக்கவேண்டும்.


ஊட்டமும், சக்தியும் மட்டும் போதுமா? கூடவே சுவையும் தேவைதானே? உப்போ, இனிப்போ, காரமோ தேவையானவற்றை சேர்க்கத்தானே வேண்டும்.


அதுப்போலத்தான் சினிமாவும். அவர் திரைப்படங்கள் அப்படித்தான் இருந்தன


சரி, ஒரு பார்வையாளனுக்கு எவ்வித பொறுப்புமில்லையா? ஒரு திரைப்படத்தை புரிந்துக்கொள்வதற்கு அவன் எவ்வித முனைப்பும், சிரத்தையும் எடுக்க வேண்டியது இல்லையா


ஏன் இல்லை. கண்டிப்பாக இருக்கிறது. சொல்லப்போனால், அப்படி அவனுடைய கவனத்தை, மெனக்கெடலைக்கோரும் சினிமாவைத்தான் அவன் விரும்புகிறான். இது எல்லாத்திரைப்படங்களுக்கும் பொருந்தும். வெகுசன சினிமாவில் கூட அவன் எதிர்ப்பார்ப்பது அதைத்தான். அவன் ஊகிக்கக்கூடிய காட்சிகளை அவன் விரும்புவதே இல்லை. அவனுடைய கற்பனைக்கு, அறிவிற்கு சவால் விடும் திரைப்படங்களைத்தான் அவன் விரும்புகிறான். யோசித்தால் இது உண்மை என்பதும் புரியும். எனில், அவனால் ஏன் ஒரு கலைப்படைப்பை புரிந்துக்கொள்ள முடிவதில்லை. ஏன் அதற்கு அவன் எவ்வித முனைப்பும், சிரத்தையும் காட்டுவதில்லை


அதற்கும் காரணம் இருக்கிறது


(தொடரும்)


#koozhangalmovie #koozhangalthemovie #tamilcinema #tamil #cinema #movies #vijayarmstrong #கூழாங்கல் #கூழாங்கல்திரைப்படம் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...