முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கூழாங்கல்: திரைப்படத்தை முன்வைத்து (02)




படைப்பாளிகளைப்போலவே, சினிமா ஆர்வலர்களும், விமர்சகர்களும் இரண்டு வகையாக பிரிந்திருக்கிறார்கள். வெகுசன சினிமாவையும் கொண்டாடுவது, நாயகத்துதி, கேளிக்கை சமாச்சாரங்களை உயர்த்தி பேசுவது, விரும்புவது ஒருபுறமும், உலகசினிமா, கலைப்படைப்பு போன்றவற்றையும் ஆதரித்து பேசுவது என்று ஒரு சாராரும், அதெல்லாம் இல்லை, திரைப்படம் என்றால் அது கலைப்படங்கள்தாம், அதுவே உயர்ந்தக்கலை என்று பேசுபவர்களும், செயல்படுபவர்களும் இங்கே உண்டு. இருக்கலாம் தவறில்லை. பிரியாணியும் பிடிக்கும், கம்மங்கூழும் பிடிக்கும். அதிலென்ன தவறு.


கலைப்படைப்பு என்பது, வாழ்வியலை முன்னிறுத்த வேண்டும், அது தெளிந்த நீராக, கலப்படம் அற்ற உணவாக, நோயை தீர்க்கும் மருந்தாக, இருட்டில் ஏற்றப்படும் சிறு தீபமாக இருந்தல் வேண்டும் என்பது பொதுவான விருப்பம். அது முறையானது கூடத்தான். அதன் அடிப்படையில்தாம் ஒரு கலைப்படைப்பை ஏற்கிறோம் அல்லது நிராகரிக்கிறோம்


எனில் எது நல்லப்படம்


வாழ்வியலைப்பேசுவது, அரசியல்பேசுவது, எதார்த்தமாக இருப்பது, வன்முறையற்று, ஆபாசமற்ற, கெடுதலைப் போதிக்காமல் நன்மையை, தீமையை பிரித்துக்காட்டுவது என்று சொல்லிக்கொண்டே போகலாம். சரி இதெல்லாம் இருந்துவிட்டால், அது நல்லப்படமாகிவிடுமா?


பாலுமகேந்திரா ஒருமுறை சொன்னார், நல்லப்படம் என்பதுதாயின் உணவைப்போல இருக்கவேண்டும்’. 


பிள்ளையின் தேவையறிந்து, அன்போடு, பக்குவத்தோடு, சுவையோடு, தரத்தோடு இருத்தல் வேண்டும். ஆதார நோக்கம் பிள்ளையின் பசியாற்றுதல், உடலுக்கு தேவையான சக்தியைக்கொடுத்தல் என்பதுதான். கூடவே அது தரமானதாக, சுவையானதாக, கெடுதல் அற்றதாக இருக்கிறதா என்பதைப் பார்த்துதான் ஒரு தாய், தன் சேய்க்கு உணவு ஊட்டுகிறாள். திரைப்படமும் அப்படித்தான் இருக்கவேண்டும்.


ஊட்டமும், சக்தியும் மட்டும் போதுமா? கூடவே சுவையும் தேவைதானே? உப்போ, இனிப்போ, காரமோ தேவையானவற்றை சேர்க்கத்தானே வேண்டும்.


அதுப்போலத்தான் சினிமாவும். அவர் திரைப்படங்கள் அப்படித்தான் இருந்தன


சரி, ஒரு பார்வையாளனுக்கு எவ்வித பொறுப்புமில்லையா? ஒரு திரைப்படத்தை புரிந்துக்கொள்வதற்கு அவன் எவ்வித முனைப்பும், சிரத்தையும் எடுக்க வேண்டியது இல்லையா


ஏன் இல்லை. கண்டிப்பாக இருக்கிறது. சொல்லப்போனால், அப்படி அவனுடைய கவனத்தை, மெனக்கெடலைக்கோரும் சினிமாவைத்தான் அவன் விரும்புகிறான். இது எல்லாத்திரைப்படங்களுக்கும் பொருந்தும். வெகுசன சினிமாவில் கூட அவன் எதிர்ப்பார்ப்பது அதைத்தான். அவன் ஊகிக்கக்கூடிய காட்சிகளை அவன் விரும்புவதே இல்லை. அவனுடைய கற்பனைக்கு, அறிவிற்கு சவால் விடும் திரைப்படங்களைத்தான் அவன் விரும்புகிறான். யோசித்தால் இது உண்மை என்பதும் புரியும். எனில், அவனால் ஏன் ஒரு கலைப்படைப்பை புரிந்துக்கொள்ள முடிவதில்லை. ஏன் அதற்கு அவன் எவ்வித முனைப்பும், சிரத்தையும் காட்டுவதில்லை


அதற்கும் காரணம் இருக்கிறது


(தொடரும்)


#koozhangalmovie #koozhangalthemovie #tamilcinema #tamil #cinema #movies #vijayarmstrong #கூழாங்கல் #கூழாங்கல்திரைப்படம் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,