முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விளக்குகள்(lights)

ஒளிப்பதிவு செய்ய மிக ஆதாரமாக வெளிச்சம் தேவைப்படுகிறது. வெளிச்சத்தை உருவாக்க தரமான விளக்குகள் பல உண்டு. இவை ஒளியின் தன்மையையும் வண்ணத்தின் தரத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளன.

ஆதார ஒளிகள்:

ஒளிப்பதிவுக்கு ஆதாரமாக இரண்டு ஒளிவகைகள் உபயோகிக்கப்படுகின்றன. ஒன்று சூரியனிலிருந்து பெறப்படும் ஒளி 'டே லைட்' (Day light - சூரிய வெளிச்சம்) என்றும் செயற்கை விளக்குகளால் உருவாக்கப்படும் ஒளி 'டங்ஸ்டன் லைட்' (Tungsten Light- இழை வெளிச்சம்) என்றும் கொள்கிறோம்.

சூரியனால் உருவாக்கப்படும் 'டே லைட்' நீல நிறத்திற்கு அருகில் அதாவது, நீல நிறத்தை அதிகமாக கொண்டுள்ள வெள்ளை ஒளியாக இருக்கிறது.

செயற்கை விளக்குகளால் உருவாக்கப்படும் 'டங்ஸ்டன் லைட்' (இழை வெளிச்சம்) மஞ்சளும் சிவப்பும் கலந்த ஒருவித காவி நிறத்தை (Warm Light - வாம் லைட்) தன்னுள் அதிகமாகக் கொண்டுள்ளது.

'டே லைட்'-ஐ செயற்கையாக உருவாக்க விளக்குகள் உண்டு. 'டே லைட்ஸ்' என்று அழைக்கப்படும் விளக்குகளிலிருந்து பெறப்படும் ஒளியானது சூரியனிலிருந்து பெறப்படும் ஒளியின் தன்மையை ஒத்திருக்கிறது.


மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட இவ்விரண்டு ஆதார ஒளிகளைப் புரிந்துகொள்வது மிக அவசியம். 'கெல்வின்' (Kelvin) என்பது வெப்பத்தை (Temperature) அளக்கப்பயன்படும் அலகு. அதாவது வெப்பம் வண்ணத்தையும் வண்ணம் ஒளியையும் நிர்ணயிக்கின்றன. இங்கு ஒளியின் வண்ணத்தைக் கொடுக்கும் வெப்பம் (Color Temperature) 'கெல்வின்' எனும் அலகால் அளக்கப்படுகிறது.

ஒரு கறுப்பு இரும்புத் துண்டை(Carbon Block) சூடாக்கினால் முதலில் அது சிவப்பு நிறமாகவும் பின்பு படிப்படியாக ஆரஞ்சு, மஞ்சளென மாறி நீல நிறமாக மாறுகிறது. அந்தக் கறுப்பு இரும்புத் துண்டு குறிப்பிட்ட நிறத்திற்கு மாறும் போது அதன் அப்போதைய வெப்பத்தைக் குறித்துக் கொள்கிறார்கள். அதன்படி குறிப்பிட்ட வெப்ப அளவைக்கொண்டு ஒளியின் அப்போதைய வண்ணத்தைத் தெரிந்துகொள்ளலாம். கெல்வினை 'K' என்று குறிக்கிறார்கள்.

அதன்படி பார்க்க சூரியனிலிருந்து பெறப்படும் ஒளியானது காலையிலிருந்து மாலை வரை 5400K லிலிருந்து 25000K வரை மாறுபடுகிறது. பெரும்பான்மையான நேரங்களில் சூரிய ஒளியானது 5500K யிலிருப்பதால், 'டே லைட்' என்பது 5500K என்று நிர்ணயித்திருக்கிறார்கள். 'டே லைட்'-ஐ 5500K வெளிச்சத்தைத் தருவதற்கு ஏற்றாற்போல் தயாரிக்கிறார்கள். 'டங்ஸ்டன் லைட்'-ஐ 3200K வெளிச்சத்தை தருவதற்கு ஏற்றாற்போல் தயாரிக்கிறார்கள்.

(இவ்விரண்டு ஒளிகளின் அடிப்படையில் படச்சுருள்கள் தயாரிக்கப்படுவதை நாம் ‘படச்சுருள்கள்’ கட்டுரையில் பார்த்தது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்).

'டே லைட்'-ஐ உருவாக்க HMI, PAR மற்றும் KinoFlo போன்ற விளக்குகள் பயன்படுகின்றன. (உ.தா) 4KW, 2.5KW, 575W HMI - 6KW, 4KW, 1.2KW PAR - 10 BANK, 4 BANK KinoFlos.

'டங்ஸ்டன் லைட்'-ஐ உருவாக்க 5KW, 2KW, 1KW விளக்குகள் உண்டு.

Kinoflo Light

PAR Light

Tungsten Lights

KW என்பது 'கிலோ வாட்'(Kilo Watt) என்பதன் சுருக்கம்.

 'Watt' என்பது மின்சாரத்தை அளக்க பயன்படும் அலகு. அதாவது ஒரு விளக்கு எரிய அது எடுத்துக்கொள்ளும் மின்சாரத்தின் அளவையும்கொண்டு அவ்விளக்கின் சக்தி கணக்கிடப்படுகிறது. 1KW விளக்கு என்பது அந்த, விளக்கு எரிவதற்கு 1000 வாட் (1KW =1000 Watt) மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் என்று பொருள்.

கருத்துகள்

  1. சார் இந்த விணயத்தை கூட இன்னும் கொஙசம் விரிவா எழுதலாம்... இன்னும் நினைவில் கொள்ள சில காட்சிகளை கூட உதாரணமாக சொல்ல வேண்டுகின்றேன்..

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பாக ஜாக்கி சேகர்..நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,