முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விளக்குகள்(lights)

ஒளிப்பதிவு செய்ய மிக ஆதாரமாக வெளிச்சம் தேவைப்படுகிறது. வெளிச்சத்தை உருவாக்க தரமான விளக்குகள் பல உண்டு. இவை ஒளியின் தன்மையையும் வண்ணத்தின் தரத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளன.

ஆதார ஒளிகள்:

ஒளிப்பதிவுக்கு ஆதாரமாக இரண்டு ஒளிவகைகள் உபயோகிக்கப்படுகின்றன. ஒன்று சூரியனிலிருந்து பெறப்படும் ஒளி 'டே லைட்' (Day light - சூரிய வெளிச்சம்) என்றும் செயற்கை விளக்குகளால் உருவாக்கப்படும் ஒளி 'டங்ஸ்டன் லைட்' (Tungsten Light- இழை வெளிச்சம்) என்றும் கொள்கிறோம்.

சூரியனால் உருவாக்கப்படும் 'டே லைட்' நீல நிறத்திற்கு அருகில் அதாவது, நீல நிறத்தை அதிகமாக கொண்டுள்ள வெள்ளை ஒளியாக இருக்கிறது.

செயற்கை விளக்குகளால் உருவாக்கப்படும் 'டங்ஸ்டன் லைட்' (இழை வெளிச்சம்) மஞ்சளும் சிவப்பும் கலந்த ஒருவித காவி நிறத்தை (Warm Light - வாம் லைட்) தன்னுள் அதிகமாகக் கொண்டுள்ளது.

'டே லைட்'-ஐ செயற்கையாக உருவாக்க விளக்குகள் உண்டு. 'டே லைட்ஸ்' என்று அழைக்கப்படும் விளக்குகளிலிருந்து பெறப்படும் ஒளியானது சூரியனிலிருந்து பெறப்படும் ஒளியின் தன்மையை ஒத்திருக்கிறது.


மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட இவ்விரண்டு ஆதார ஒளிகளைப் புரிந்துகொள்வது மிக அவசியம். 'கெல்வின்' (Kelvin) என்பது வெப்பத்தை (Temperature) அளக்கப்பயன்படும் அலகு. அதாவது வெப்பம் வண்ணத்தையும் வண்ணம் ஒளியையும் நிர்ணயிக்கின்றன. இங்கு ஒளியின் வண்ணத்தைக் கொடுக்கும் வெப்பம் (Color Temperature) 'கெல்வின்' எனும் அலகால் அளக்கப்படுகிறது.

ஒரு கறுப்பு இரும்புத் துண்டை(Carbon Block) சூடாக்கினால் முதலில் அது சிவப்பு நிறமாகவும் பின்பு படிப்படியாக ஆரஞ்சு, மஞ்சளென மாறி நீல நிறமாக மாறுகிறது. அந்தக் கறுப்பு இரும்புத் துண்டு குறிப்பிட்ட நிறத்திற்கு மாறும் போது அதன் அப்போதைய வெப்பத்தைக் குறித்துக் கொள்கிறார்கள். அதன்படி குறிப்பிட்ட வெப்ப அளவைக்கொண்டு ஒளியின் அப்போதைய வண்ணத்தைத் தெரிந்துகொள்ளலாம். கெல்வினை 'K' என்று குறிக்கிறார்கள்.

அதன்படி பார்க்க சூரியனிலிருந்து பெறப்படும் ஒளியானது காலையிலிருந்து மாலை வரை 5400K லிலிருந்து 25000K வரை மாறுபடுகிறது. பெரும்பான்மையான நேரங்களில் சூரிய ஒளியானது 5500K யிலிருப்பதால், 'டே லைட்' என்பது 5500K என்று நிர்ணயித்திருக்கிறார்கள். 'டே லைட்'-ஐ 5500K வெளிச்சத்தைத் தருவதற்கு ஏற்றாற்போல் தயாரிக்கிறார்கள். 'டங்ஸ்டன் லைட்'-ஐ 3200K வெளிச்சத்தை தருவதற்கு ஏற்றாற்போல் தயாரிக்கிறார்கள்.

(இவ்விரண்டு ஒளிகளின் அடிப்படையில் படச்சுருள்கள் தயாரிக்கப்படுவதை நாம் ‘படச்சுருள்கள்’ கட்டுரையில் பார்த்தது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்).

'டே லைட்'-ஐ உருவாக்க HMI, PAR மற்றும் KinoFlo போன்ற விளக்குகள் பயன்படுகின்றன. (உ.தா) 4KW, 2.5KW, 575W HMI - 6KW, 4KW, 1.2KW PAR - 10 BANK, 4 BANK KinoFlos.

'டங்ஸ்டன் லைட்'-ஐ உருவாக்க 5KW, 2KW, 1KW விளக்குகள் உண்டு.

Kinoflo Light

PAR Light

Tungsten Lights

KW என்பது 'கிலோ வாட்'(Kilo Watt) என்பதன் சுருக்கம்.

 'Watt' என்பது மின்சாரத்தை அளக்க பயன்படும் அலகு. அதாவது ஒரு விளக்கு எரிய அது எடுத்துக்கொள்ளும் மின்சாரத்தின் அளவையும்கொண்டு அவ்விளக்கின் சக்தி கணக்கிடப்படுகிறது. 1KW விளக்கு என்பது அந்த, விளக்கு எரிவதற்கு 1000 வாட் (1KW =1000 Watt) மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் என்று பொருள்.

கருத்துகள்

  1. சார் இந்த விணயத்தை கூட இன்னும் கொஙசம் விரிவா எழுதலாம்... இன்னும் நினைவில் கொள்ள சில காட்சிகளை கூட உதாரணமாக சொல்ல வேண்டுகின்றேன்..

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பாக ஜாக்கி சேகர்..நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...