முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒளியமைப்பு (Lighting)

"ஒளி என்பதும் ஒரு கதாப்பாத்திரம். ஒரு சக்தி. ஒளியமைப்புச் செய்யும் போது அதை மனதில்கொண்டு கையாண்டு பயன்படுத்து. பிறகு பார் அதன் பலனை."  - V.K.மூர்த்தி



ர் ஒளிப்பதிவாளனாக நான் எப்படி ஒரு காட்சிக்கு ஒளியமைப்புச் செய்கிறேன், எதையெல்லாம் காரணிகளாகக் கொள்கிறேன், எவற்றையெல்லாம் கவனிக்கிறேன் என்பதையும், ஒளியமைப்பில் நான் பின்பற்றும் முறையையும், என் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டு, ஒளியமைப்புப் பற்றிய ஒரு அறிமுகத்தை உங்களுக்கு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

ர் ஒளிப்பதிவாளர் என்பவர் இரண்டு விதத்தில் செயல்படவேண்டும். ஒன்று அவருடைய ரசனை மற்றும் கற்பனை சார்ந்த அறிவு (Creative Knowledge) மற்றொன்று தொழில்நுட்ப அறிவு (Technical Knowledge). வ்விரண்டு அறிவையும் எப்படிப் பயன்படுத்துகிறார், எப்படி ஒன்றிணைக்கிறார் என்பதைப் பொறுத்தே அவருடைய படைப்பின் மேன்மை வெளிப்படுகிறது.

ஒரு காட்சி விவரிக்கப்பட்டவுடன் அவர் முதலில் பார்க்க வேண்டியது, அக்காட்சி நடக்கும் தளத்திற்கு ஒளி எப்படிக் கிடைக்கிறது என்பதைதான். உதாரணமாக ஒரு சிறிய படுக்கை அறை. வடிவமைக்கப்பட்ட அரங்கமாகிருந்தால் ஏதேனும் விளக்கைப் பயன்படுத்தி இருப்பார்கள். அதுவே உண்மையான அரங்கம் (வீடு) என்றால் அவ்வறைக்கு ஒளி எங்கிருந்து வருகிறது என்பதனைப் பார்த்தோமானால்..

பகலாகயிருந்தால்;

1.       கதவு மற்றும் சன்னலின் வழியாக ஒளி உள்ளே வரும். அறை முழுவதும் வெளிச்சமாக இருக்கலாம் அல்லது சன்னலுக்கு அருகில் வெளிச்சமாகவும் பாதி அறை இருட்டாகவும் இருக்கலாம்.

2.       உள்ளே கூரையில் உள்ள விளக்கைப் பயன்படுத்தியிருந்தால், அறை முழுவதும் வெளிச்சமாக இருக்கும்.

இதுவே இரவு என்றால்;

1.       சன்னலிருந்து வரும் வெளிச்சமானது, நிலவு வெளிச்சமாகவோ, வெளியே எரியும் விளக்கிலிருந்தோ அல்லது சாலையில் செல்லும் வாகனத்திலிருந்தோ வருபவையாக இருக்கும்.

2.       உள்ளே இருட்டாக இருக்கலாம் அல்லது விளக்கு எரிவதால் வரும் வெளிச்சமும் இருக்கலாம்.

3.       இரவு விளக்கைப் பயன்படுத்தியிருந்தால் இருட்டாக, மங்கலான ஒளி இருக்கும்.

சரி வெளிச்சம் எங்கிருந்தெல்லாம் வரும் என்பது தெரிந்துவிட்டது. அடுத்து அந்தக் காட்சி நடக்கும் காலம் என்ன? இரவா பகலா? என்பதைக் கொண்டு வெளிச்சம் எங்கிருந்து வரவேண்டும் என்பதையும், அந்தக் காட்சியின் தன்மை, சூழல் போன்றவற்றைக்கொண்டு ஒளியின் தன்மையை நிர்ணயிக்கலாம். மற்றும் படத்தின் தன்மை, வகையைப்பொருத்தும் ஒளியின் வகைமையை நிர்ணயிக்க வேண்டும்.  அதாவது நகைச்சுவைப் படமாகவோ ஜனரஞ்சகமானப் படமாகவோ இருந்தால் வெளிச்சம் மிகுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நடிகர்களின் அங்க அசைவுகள் பார்வையாளனுக்குத் தெளிவாகத் தெரியும் என்பதனால். அதுவே ஒரு த்ரிலர் படத்திற்கு குறைந்த அளவு ஒளியை தேர்வுசெய்யவேண்டும். ஏனெனில் காட்சியில் என்ன இருக்கிறது என்பது முழுமையாக காட்டப்படாதப் போதுதான் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். கூடவே, இருட்டு பயத்தையும் கொடுக்கும்.

சரி, நமக்கு கொடுக்கப்பட்ட காட்சியில் காதலர்கள் இருவர் நள்ளிரவில் படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருக்கும் போது வெளியே வந்து நிற்கும் காரின் சத்தம் கேட்டு எழுந்திருக்கிறார்கள். அது ஒரு த்ரிலர் படம் என்று கொண்டால், இப்போது ஒளியமைப்பிற்கு நமக்கு இருக்கும் சாத்தியங்கள் என்ன?

நள்ளிரவு என்பதனாலும், த்ரிலர் படம் என்பதனாலும் அதிகபடியான ஒளியமைப்பு இருக்க முடியாது எனில்..

1.        காதலர்கள் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும்போது உள்ளே இரவு விளக்கு எரிந்துக் கொண்டிருக்கலாம். அந்த மங்கலான ஒளியில் அவர்கள் தூங்கிக்கொண்டிருப்பது தெரிகிறது. சன்னல் வழியாக எந்த வெளிச்சமும் வரவில்லை. வெளியே கார் வந்து நிற்கும் போது சன்னல் வழியாக காரின் முகப்பு விளக்கின் வெளிச்சம் இவர்கள் மேல் விழலாம் அல்லது விழாமல் போகலாம்.

2.       உள்ளே எந்த விளக்கும் எரிய வில்லை. சன்னல் வழியாக ஏதோவொரு வெளிச்சம் இவர்கள் மேல் விழுந்திருக்கிறது. வந்து நின்ற காரின் வெளிச்சம் இவர்கள் மேல் விழுகிறது அல்லது விழவில்லை.

இதில் எந்த சாத்தியத்தை பயன்படுத்துப்போகிறீர்கள் என்பது உங்களின் ரசனை மற்றும் கற்பனை அறிவைச் சார்ந்தது. ஒரு காட்சிக்கு எந்த வித ஒளியமைப்புச் செய்யப்போகிறீர்கள் என்பது உங்களின் ரசனை மற்றும் கற்பனை அறிவு என்றால் அதை எப்படி ஒளிப்பதிவு செய்யப்போகிறீர்கள் என்பது உங்களின் தொழில்நுட்ப அறிவைப் பொருத்தது.

  
அதற்கு நீங்கள் சில ஒளிப்பதிவு தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒளிப்பதிவை, ஒளியைக்கொண்டு படம் வரைவது (Painting with Light) என்பார்கள். இந்த கலைக்கு படச்சுருள்/டிஜிட்டல், ஒளியமைப்புக் கருவிகள், வண்ணம் போன்றவற்றைப் பற்றிய அறிவு இருப்பதோடு, இதன் ஆதார தொழில்நுட்பங்களான எக்ஸ்போஷர் (exposure), வண்ணத்தின் விதிகள் (color theory) மற்றும் ஒளியியல் (optics) பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

ஓர் ஒளிப்பதிவாளர் இருபரிமாண நெகட்டிவில் முப்பரிமாணப் பிம்பத்தைக் கொண்டுவரவேண்டும். அதாவது நாம் இயல்பில் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் முப்பரிமாத்தன்மைக் கொண்டவை. உயரம், அகலம் மற்றும் தூரம் என்ற மூன்று பரிமாங்களைக் கொண்டது. ஆனால் நெகட்டிவ் என்பது உயரம் மற்றும் அகலம் என்ற இரண்டு பரிமாணங்களை மட்டுமே கொண்டது. ஓவியமாகட்டும் புகைப்படமாகட்டும் அதில் இந்த முப்பரிமாணத்தன்மையை கொண்டுவருவதிலேயே அக்கலையின் உன்னதம் அடங்கிருக்கிறது.

இந்த முப்பரிமாண பிம்பத்தைக் கொண்டு வருவதற்கு ஒளியமைப்பில் நாம் கவனிக்க வேண்டியது, ஒரு பிம்பத்தில் இருக்கும் நடிகர்களையும் (Subject), பின்புலத்தையும் (Background) தனித்துப் பிரித்து காட்டுவது. பிம்பத்தில் இருட்டு அல்லது குறைந்தவெளிச்சப்(Shadow) பகுதி மற்றும் அதிவெளிச்சப்(Highlight) பகுதிக்கு இடையேயான வித்தியாசங்களையும் நிர்ணயிப்பதாகும். இந்த வித்தியாசங்களை ஒளியைக் கொண்டோ அல்லது வண்ணத்தைக்கொண்டோ நிர்ணயிக்கலாம்.

ஒரு பொருளின் மீது ஒளி விழும்போது அப்பொருளின் உருவத்தை காட்டுகிறது. அந்தப் பொருளில் வளைவுகளோ வடிவமோ இருக்க அங்கே உருவாகும் இருட்டோ அல்லது குறைந்தவெளிச்சம்(Shadow) ப்பொருளின் வடிவத்திலிருக்கும் வேறுபாட்டை காட்டுகிறது. மேலும் அதிவெளிச்சப்(Highlight) பகுதியும் இதற்கு உதவுகிறது.

அதாவது வெளிச்சம் (Light), இருட்டு அல்லது குறைந்தவெளிச்சம் (Shadow), அதிவெளிச்சம் (Highlight) இவற்றைக்கொண்டு ஒரு பொருளின் முப்பரிமாணத்தன்மையை நாம் உணர்கிறோம். அதே அடிப்படையிலேயே ஒளிப்பதிவையும் செய்யவேண்டும்.

ஒளியமைப்பிற்கு இரண்டு ஆதார சித்தாந்தங்கள் உண்டு.

1. இயல்புத்தன்மை (Naturalism) - ஒளியை அது இருக்கும் விதத்திலேயே பயன்படுத்துவது. அதாவது இரண்டு நபர்கள் காலை சூரிய ஒளியில் எதிர் எதிராக நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் ஒருவர் மீது சூரிய ளி, நேரடியாக முகத்தில் விழும் (Face Light), மற்றவர்க்கு பின்புறம் விழும் (Back Light) அல்லவா? இதை அப்படியே பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்யும் முறை ஒன்று.

2. அழகியல் (Pictorialism) - ஒளியை அழகியலுக்காக மாற்றி அமைத்துக்கொள்வது இன்னொரு வகை, அது இயல்பு தன்மையில் இல்லாவிட்டால் கூட. அதே சூரிய ஒளி இரு நபர்கள் உதாரணத்தில் இருவருக்கும் பின்புறத்திலிருந்து ஒளி வரும்படி மாற்றி அமைத்துக்கொள்வது. ஏனெனில் Back light-இல் அழகாக இருக்கும் என்பதனால்.

இந்த Back Light அழகைத் தெரிந்துக்கொள்ள காலையில் பனிபடர்ந்த புற்களின் மீது சூரிய ஒளி விழும் திசையிலிருந்து பார்ப்பதை விட சூரிய ஒளிக்கு எதிர்புறத்திலிருந்து புற்களைப்பாருங்கள். அந்தப் புற்கள் இன்னும் அழகாகத்தெரியும். இதை ஒருமுறை முயன்று பாருங்கள்.

ஒளியமைப்பில் இரண்டு முறைகள் உண்டு.

1. High-Key: காட்சிகளை வெளிச்சமாகவும், வெளிச்சத்திற்கும் இருட்டிற்கு இடையேயான வித்தியாசத்தை குறைத்தும் ஒளியமைப்பது.

2. Low-Key: காட்சிகளை இருட்டாகவும், வெளிச்சத்திற்கும் இருட்டிற்கு இடையேயான வித்தியாசத்தை அதிகரித்தும் ஒளியமைப்பது. காட்சியில் மிக குறைந்த இடங்களே ஒளியூட்டப்பட்டிருக்கும்.

ஒளியைப் புரிந்துக்கொள்ள, ஒளி எதனால் ஆனது அல்லது ஒளியில் இருக்கும் காரணிகள் (THE PROPERTIES OF LIGHT) என்ன என்பதைத் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

நான்கு முக்கிய காரணிகளைக்கொண்டு ஒளியை விவரிக்க முடியும்:

1. Intensity- ஒளியின் அடர்த்தி அல்லது ஒளியின் அளவு. இதை 'foot-candles' என்ற அலகால் குறிக்கின்றோம். ஒரு foot-candles என்பது ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது உருவாகும் ஒளியின் அளவை அந்த மெழுகுவர்த்தியிலிருந்து ஒரு அடி தூரத்தில் இருந்து அளக்கும் போது கிடைக்கும் அளவைக் குறிப்பது.

2. Color- வண்ணம். ஒளி தோ ஒரு வண்ணத்தைக் கொண்டுதான் இருக்கிறது. சூரிய வெளிச்சமோ, மெழுகுவர்த்தி வெளிச்சமோ, அதற்கென்று ஒரு வண்ணம் இருக்கிறது.

3.Quality- ஒளியின் தரம். இங்கே தரம் என்பது Hardlight, Softlight -ஐ குறிக்கிறது.
                Hardlight-  ஒரே திசையில் குவிக்கப்பட்ட (direct) ஒளியான இது அதிக
                shadow-வை ஏற்படுத்தும்.
               
                softlight- திசைகளற்ற (Indirect or diffused) ஒளியான இது குறைந்த அளவே  
                shadow-வை ஏற்படுத்தும். 

4.Angle- ஒளிவிழும் திசை. பொருளின் மீது ஒளிவிழும் திசையைப் பொறுத்து ஒளியின் அளவும் தரமும் மாறும்.


ஒளியை இரண்டுவிதமாகப் பயன்படுத்தலாம்:

ஒரு காட்சியில் ஒளியை சேர்த்து (Additive lighting) fill-அதிகப்படுத்துவதன் மூலமாகவோ அல்லது ஒளியைக் குறைத்து (subtractive lighting) negative fill கொடுப்பதன் மூலமாகவோ ஒளியமைப்புச் செய்யலாம்.

மும்முனை ஒளியமைப்பு (THREE-POINT LIGHTING):

மும்முனை ஒளியமைப்பு. அதாவது மூன்று ஆதார இடங்களிலிருந்து ஒரு பொருளையோ அல்லது நபரையோ ஒளியூட்டுவது.

1. Key Light - ஆதார ஒளி: இந்த 'Key Light' என்பது, ஒரு 'Subject'-இன் ஒரு பக்கத்திலிருந்து கொடுக்கப்படும். அதாவது ஒரு நபரின் ஒருபக்கத்திலிருந்து. இடதுபக்கம் என்று வைத்துக்கொள்வோம். இப்படி ஒரு பக்கத்திலிருந்து ஒளி விழும் போது அவரின் ஒரு பக்கம் ஒளியூட்டப்பட்டும், மறுபக்கம் (வலதுப்பக்கம்) நிழலாகவும் இருக்கும். மேலும் இந்த 'Key Light' ஆனது அந்த 'Subject'-ஐ தெளிவாக வரையறுக்கும். இந்த ஒளியே அப்பொருளை / நபரை படம் பிடிப்பதற்கான ஆதார ஒளியாகும்.

2. Fill Light - துணை ஒளி: இந்த 'Fill Light' என்பது 'Key Light'-ஆல் உருவாகும் நிழலை குறைப்பதற்கு அல்லது முழுமையாக நீக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது 'Key Light'-க்கு மறுபக்கத்தில் 'Fill Light' வைக்கப்படும். இந்த 'Fill Light' ஆனது 'Key Light'-ஐ விட அளவில் குறைவாக இருக்கும். மேலும் இது 'Soft Light'-ஆகவும் இருக்கும்.

வ்விரண்டு ஒளிகளைக் கொண்டு ஒரு பொருளை / நபரை (Subject) தெளிவாக ஒளியூட்டி விடலாம். 'subject'-இன் முழுபரிமாணத்தையும் தெளிவாக படம்பிடிக்க முடியும்.

3.Back Light - பின்புற ஒளி: இரண்டு ஒளிகளைக் கொண்டு ஒரு 'Subject' ஒளியூட்டப்பட்ட பிறகு, அந்த 'Subject'-ஐ அதன் பின்புலத்திலிருந்து பிரிப்பதற்கு, இந்த மூன்றாவது 'Back Light' பயன்படுகிறது. அதாவது ஒரு 'Subject'-யின் பின்புறத்திலிருந்து (Back Side) இந்த ஒளி கொடுக்கப்படுகிறது. அதனால்தான் இது 'Back Light' என அழைக்கப்படுகிறது.

இப்படி பின்புறத்திலிருந்து ஒளி கொடுப்பதனால், அந்த 'Subject'-இன் வடிவத்தை அதன் பின்புலத்திலிருந்து பிரித்து தனித்து காட்டிவிட முடிகிறது. இதனால் 'Subject', அதன் பின்புலத்தோடு 'ஒன்றிவிடுவதிலிருந்து' (Merge) தவிர்க்க முடிகிறது. இம்முறையை 'High Light' என்றும் சொல்லுகிறார்கள்.

குறிப்பு: நான்காவதாக ஒரு லைட் இருக்கிறது, அது பின்புலத்தை (Background) ஒளியூட்டப் பயன்படுகிறது.

இந்த முறை மிக ஆதாரமான ஒளியமைப்பு முறை, இதை அடிப்படையாகக் கொண்டு பல விதங்களில் ஒளியமைப்புச் செய்யலாம்.

மேலேச் சென்னவைகள் எல்லாம் நீங்கள் ஒளியமைப்புச் செய்யும் போது கவனிக்க வேண்டியவைகள்.


மேலும் ஒரு காட்சியை நீங்கள் எப்படி 'எக்ஸ்போஸ்' (Expose) செய்கிறீர்கள் என்பதும், வ்வகையான லென்ஸ், எந்த வகை திறம் கொண்ட படச்சுருளை பயன்படுத்துகிறீர்கள் என்பதும் உங்களின் தொழில்நுட்ப அறிவையும், உங்களின் ரசனை மற்றும் கற்பனை அறிவையும் பொறுத்தது. நீங்கள் எப்படி அவ்விரண்டையும் ஒன்றிணைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களின் ஒளிப்பதிவின் தரம் நிர்ணயமாகும்

கருத்துகள்

  1. வாவ் ரொம்ப அருமையான விளக்கங்கள் சார். ஒரு ஒளிப்பதிவாளர் ஆக என்னவெல்லாம் செய்யவேண்டும்,எப்படியெல்லாம் இருக்கவேண்டும் எபதை பற்றி அறிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. இப்போது என்ன படம் பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் சார்.

    என்னுடைய வலைத்தளம் நிலா அதுவானத்து மேல. உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

    பதிலளிநீக்கு
  3. Starjan ( ஸ்டார்ஜன் ) மற்றும் chandru-க்கு நன்றி..இப்போது ஓய்வுதான்,என்ன படம் என்பதை விரைவில் சொல்லுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. hello vijay sir
    information is very useful and your narration is very interesting
    there is a great teacher within you. i look forward meeting you

    பதிலளிநீக்கு
  5. Sir, really it is very useful to wedding photographers.
    Because, i am a wedding photographer. It's help to increase our
    lighting knowledge. Your blog is very useful to me sir. Really Thank you very much sir.!
    chandrasekar, Palani.

    பதிலளிநீக்கு
  6. சார் இந்த பகுதி என்னை போன்ற உதவி இயக்குனருக்கு மிக முக்கியம் இதை கொடுத்ததுக்கு நன்றி........

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,