முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இனி ரஜினி, தான் யார் என்பதைத் தெரிவிப்பாரா?


ரஜினியைத் தமிழர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ரஜினி தமிழர்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?

இதுநாள் வரை தன் ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த இடம் என்ன, அவர்களை அவர் எப்படிப் பயன்படுத்தினார், அவருக்கும் அவரது ரசிகர்களுக்குமான உறவு என்ன என்பது தமிழ்ச் சமுகம் அறிந்ததுதான். அதைப்பற்றிப் பேசினால் விவாதமாகும் என்பதும் நாம் அறிந்ததுதான். அதனால் அதைப்பற்றி பேச வேண்டியதில்லை.

நான் கேட்க விரும்புவது, இனி வரும் காலங்களில் ரஜினி தமிழர்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதுதான்.

சிங்கப்பூர் மருத்துவத்திற்கு செல்வதற்கு முன்பாக அவர் வெளியிட்ட பேச்சில் "நான் அப்படி என்ன செய்துவிட்டேன், பணம் வாங்குறேன்.. நடிக்கிறேன்.. நீங்கள் எல்லாம் பெருமைப்படும்படியும், தலைநிமிர்ந்து நடக்கும்படியும் நடந்து கொள்கிறேன் ராசாக்களா" என்று தன் ரசிகர்களுக்குச் சொன்னார்.

அன்று அவர் சொன்னதன் பொருள் என்ன? பெருமைப்படும்படியும், தலைநிமிர்ந்து நடக்கும்படியும் அப்படி அவர் என்ன செய்யப்போகிறார்? தமிழர்கள் அவருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இனியாவது அவர் உணர்வாரா?

லட்சக்கணக்கான சகோதரர்களும், சகோதரிகளும் கொல்லப்பட்டபோதும் வீதிக்கு வராத தமிழன், ரஜினியின் பிரார்த்தனைக்கு வந்தான். உன்னதத் தலைவனைப் பெற்றெடுத்த தாயாரின் சிகிச்சைக்குத் தடை வந்தபோது கூடாத தமிழன் ரஜினியை வரவேற்க விமான நிலையத்தில் கூடினான். இதை நினைத்தால் தமிழர்களாகிய நாம் மட்டுமல்ல ரஜினியே வெட்கப்படவேண்டும். தன் இனத்திற்காக ஒன்றுகூடாத மக்களைத் தன் ரசிகர்களாகக் கொண்டிருப்பதற்கு.

தமிழர்களுக்கு, வேண்டாம் வேண்டாம்.. அவரது ரசிகர்களுக்கு மட்டுமாவதும், அவரை இந்த நிலைக்கு கொண்டுவந்த தமிழ் சினிமாவிற்கும், அதன் அப்பாவி ரசிகனுக்கும் அவர் என்ன செய்யப் போகிறார்?

தமிழர்களின் இன்றைய பிரச்சனைகளில் அவர் தலையிடுவாரா?

தமிழர்களின் போராட்டங்களில் அவர் கலந்துக் கொள்வாரா?

தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் அவர், இனியாவது அதை உளமாற உணர்வாரா? (இப்போது கூட இல்லை என்றால் பிறகு எப்போது?)

தமிழ்த் திரைப்படத்துறைக்கு அவர் அதிகம் செய்ய வேண்டாம். ஒன்றே ஒன்று செய்தால் கூட போதும். வருடத்திற்கு 10 (குறைந்தது) படங்கள் எடுக்கலாம். பெரும் முதலீடுகள் கூட வேண்டாம். சிறு பட்ஜட் படங்களை அவர் எடுக்கலாம். புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்புத் தரலாம். அவரது இத்தனை ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் பல இணை/உதவி இயக்குனர்களை கடந்து வந்திருப்பார், அவர்களில் இருந்து பலருக்கு வாய்ப்புகள் தரலாம். மேலும் ஒரு குழு அமைத்து புதிய தலைமுறையில் இருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வாய்ப்புகள் தரலாம். அவருக்கு தெரியாதா என்ன? சினிமாவின் போராட்டம். அவர் நினைத்தால் பலபேரின் வாழ்க்கைக்கு வழி காட்டலாம்.

அவர் எடுக்கும் படங்களில் பாதி படங்கள் ஓடாவிட்டாலும் கூட மற்ற படங்களிலிருந்து போட்ட பணத்தை எடுத்துவிட முடியும். அதுவே பெரும் வெற்றி என்றால் லாபமும் பார்த்துவிட முடியும். அப்படியே நஷ்டம் வந்தால் என்ன? அவரால் தாங்கவா முடியாது? இதை விட பெரும் பணம் அவருக்கு தமிழ் சினிமா கொடுத்திருக்கிறது. இதை ஒரு தடவையாவது அவர் முயன்று பார்க்கலாம்.

அவருக்காக தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த பல தமிழர்கள் உண்டு என்பது அவருக்குத் தெரியும். அத்தகைய தமிழனுக்கும் தமிழ் சினிமாவிற்கும் அவர் 'ஒரு சூப்பர் ஸ்டாராக' வேண்டாம், ஒரு மனிதனாக என்ன செய்யப்போகிறார்?

தமிழர்கள், நாங்கள் யார் என்பதை தெரிந்துகொண்டோம், தெரிவித்துவிட்டோம். இனி ரஜினி தான் யார் என்பதை தெரிவிப்பாரா?

.

கருத்துகள்

  1. //தமிழ் திரைப்படத்துறைக்கு அவர் அதிகம் செய்ய வேண்டாம். ஒன்றே ஒன்று செய்தால் கூட போதும். வருடத்திற்கு 10(குறைந்தது) படங்கள் எடுக்கலாம். பெரும் முதலீடுகள் கூட வேண்டாம். சிறு பட்ஜட் படங்களை அவர் எடுக்கலாம். புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரலாம். அவரின் இத்தனை ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் பல இணை/உதவி இயக்குனர்களை கடந்து வந்திருப்பார், அவர்களில் இருந்து பலருக்கு வாய்ப்புகள் தரலாம். மேலும் ஒரு குழு அமைத்து புதிய தலைமுறையில் இருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வாய்ப்புகள் தரலாம். அவருக்கு தெரியாதா என்ன? சினிமாவின் போராட்டம். அவர் நினைத்தால் பலபேரின் வாழ்க்கைக்கு வழி காட்டலாம்.//

    அற்புதம்.இது போன்ற கருத்துக்கள் தமிழ் சினிமாவை சுவாசிப்பவரிடம் இருந்துதான் வர முடியும்.
    காட்பாதரை பற்றி ஒரு பதிவு எழுதி உள்ளேன்.வருகை தாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. எனக்கென்னவோ அவரும் அரசியல்வாதிகளைப்போல் பேச ஆரம்பித்து விட்டார் என்று தோன்றுகிறது.ரசிகர்களுக்கு விருந்து வைக்கவே....வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  3. //லட்சக்கணக்கான சகோதரர்களும் சகோதரிகளும் கொல்லப்பட்டபோதும் வீதிக்கு வராத தமிழன், ரஜினியின் பிரார்த்தனைக்கு வந்தான்

    Well said, it is the people who are to be blamed and not him.

    Very good post :)

    பதிலளிநீக்கு
  4. ஹலோ..யாருப்பா அது..இங்கே வந்து அப்பளம் வட சுடறது?..

    பதிலளிநீக்கு
  5. உலக சினிமா ரசிகன்: கண்டிப்பாக படிக்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  6. நியாயமான, வித்தியாசமான கோணம்... விழிப்பார்களா விட்டில்
    பூச்சிகள்? / தமிழ்.சத்யா

    பதிலளிநீக்கு
  7. nan avaroda veri thanamana rasigan nichiyama avar ida seiyanum adu da ena madiri rasiganoda vendudal... ana

    பதிலளிநீக்கு
  8. nichayama superstar ida seiyanum seivar nan avaroda veri thanamana rasigan... ida dan avar rasigan elarum virumbugirom

    பதிலளிநீக்கு
  9. Sir...unga ealla post um padikirean...useful ah irukku...unga kita asistant ah sethukuveengalaa..rajini panna maataar...neengalaavathu interest ulla eanna maathiri neraiya assistant ku chance tharalaamea...

    பதிலளிநீக்கு
  10. Sir...unga post eallam padikirean...roomba useful ah irukku...unga kita assistant ah serthupeengalaa?? rajini panna maataar...neenga eanna maathiri interest ulla neraiya perruku assistant ah chance koodukalaamea...

    பதிலளிநீக்கு
  11. உண்மையில் பாராட்டத்தக்க பதிவு தங்களுடையது . சினி உலகில் ரஜினியைப்பற்றி கற்பனைப்புராணம் பாடிக்கொண்டிருக்கும் வேளையில் . நீங்கள் இப்படி எழுதியிருப்பது அதிசயத்தையும் இன்பதையும் அளிக்கிறது . அருமையான கட்டுரை அண்ணா ! தொடருங்கள் .

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,