முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'ஒண்டிப்புலி' படத்திலிருந்து சில புகைப்படங்கள்

'ஒண்டிப்புலி' என்னும் புதிய படத்தை இப்போது ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறேன். இதில் 'Arri Alexa' கேமராவைப் பயன்படுத்துகிறேன். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இயங்கும் இக்கேமராவில் 'புகைப்படம்' (still-grabs) எடுக்கும் வசதியும் இருக்கிறது. இப்புகைப்படங்களை 'DI'-க்கு அடிப்படையாகக் கொள்ளலாம். இக்கேமராவைப் பற்றி சொல்லுவதற்கு நிறைய செய்திகள் இருக்கிறது. அவற்றை வரும் கட்டுரைகளில் சொல்லுகிறேன். இப்போதைக்கு 'ஒண்டிப்புலி' படத்திலிருந்து சில  புகைப்படங்கள், உங்கள் பார்வைக்கு.

இப்புகைப்படங்கள் 'Arri Alexa' கேமராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டவைகள். இங்கே காணக்கிடைக்கும் புகைப்படங்கள் எவ்வித 'வண்ண நிர்ணயமும்' (Color correction) செய்யப்படாதவை.  Arri Alexa கேமராவிலிருந்து கிடைத்த .jpg புகைப்படங்கள். இணையத்திற்காக அதன் அளவைக் (File Size) குறைத்துள்ளேன். இப்புகைப்படங்கள் சொல்லும் செய்திகள் பல இருக்கின்றன. இக்கேமராவின் மீது ஆர்வம் கொண்டவர்கள் இப்புகைப்படங்களைக் கவனமாகப் பாருங்கள். இக்கேமராவின் தன்மைகள் புலப்படும்.  குறைந்த வெளிச்சத்திலிருந்து (Shadow/black) அதி வெளிச்சம் (High Light) வரை இக்கேமரா கையாளும் தகுதியை கவனியுங்கள். இக்கேமராவின் 'Exposure latitude'-ஐப் புரிந்துக்கொள்ள இப்புகைப்படங்கள் உதவும். வரும் கட்டுரைகளில் விவரமாக இக்கேமராவின் தகுதிகளைப் பற்றிப் பேசலாம்.



































கருத்துகள்

  1. அட்டகாசமான ஒளிப்பதிவு. கீழேயிருந்து மேலே எட்டாவது புகைப்படம் (இரவுக்காட்சி) பல விளக்குகளைக்கொண்டு உருவாக்கப்பட்டிருப்பத தெரிகின்றது. அது எனக்கு மிகவும் பிடித்த படம். வெளிப்புற பகல் காட்சிகளில் பச்சை வண்ணம் அதிகமாக இருப்பது போல் எனக்கு தெரிகின்றது. ஒருவேளை, இயற்கையாகவே அப்படி இருந்ததோ அல்லது என் மடிக்கணினியின் திரை செய்யும் கோளாறோ!

    பதிலளிநீக்கு
  2. நன்றி சக்திவேல்..இப்புகைப்படங்கள் எவ்வித வண்ண மாறுபாடும் செய்யப்பட்டதல்ல..பச்சை அதிகமாக இருப்பதைப்பற்றி- உங்கள் கணினியில் நான் பார்த்தால் மட்டுமே கருத்து சொல்ல முடியும்..:)

    பதிலளிநீக்கு
  3. முதல் போட்டோ தான் class.மத்ததெல்லாம் பரவாயில்லை.நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. ம்ம்.வாழ்த்துகள் பாஸ்..

    காட்சித்துண்டுகள் என்ற உடனே வீடியோவாக இருக்குமென நினைத்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
  5. நன்றி மரா, கார்க்கி.. //காட்சித்துண்டுகள் என்ற உடனே வீடியோவாக இருக்குமென நினைத்துவிட்டேன்// ஓ அப்படி ஒரு அர்த்தம் வருகிறதா?! தலைப்பை மாற்றி விட்டேன்.. :)

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு படமும் நன்றாக உள்ளது. இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி! அன்புடன் அழைக்கிறேன் : "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

    பதிலளிநீக்கு
  7. இந்த கேமராவைப்பற்றி நீங்கள் எழுதப்போகும் பதிவை ஆவலோடு எதிர்நோக்குகிறேன்

    பதிலளிநீக்கு
  8. First one is Awesome!!!!.The picture u have taken in morning(2 pics) & in night(26 th pics) are also great. I am regular viewer of your blog
    so i was surprised to see you after a long time.
    I am not able to type in tamil regret for this.
    My Best Wishes!!!
    Thirumavalavan

    பதிலளிநீக்கு
  9. மூவியிலிருந்து எடுத்த ஸ்டில்களா? ஸ்டில்களாகவே எடுக்கப்பட்டவைகளா?

    பதிலளிநீக்கு
  10. தருமி: டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இயங்கும் இக்கேமராவில் 'புகைப்படம்'(still-grabs) எடுக்கும் வசதியும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. ஸ்டில்களாகவே எடுக்கப்பட்டவைகள்

    பதிலளிநீக்கு
  12. அழைப்பிதழ்:

    உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து உள்ளேன்.

    மனோரஞ்சிதம் - புகைப்படச் சரம்

    http://www.blogintamil.blogspot.in/2012/04/blog-post_06.html

    வருகை புரிந்து உங்கள் கருத்துகளைச் சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.

    நட்புடன்

    வெங்கட்.
    புது தில்லி.

    பதிலளிநீக்கு
  13. புகைப்பட ஆர்வலன் எனும் முறையில் சில படங்கள் கருத்தைக் கவருகின்றன!
    பழைய நாட்களில் Arriflex (Arri என்பார்கள்) என்ற ஒரு கருவி இருந்ததே, அதன் டிஜிடல் வடிவமா Arri Alexa?

    உங்களை அறிமுகப் படுத்திய திரு.வெங்கட் நாகராஜுக்கும் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  14. R.S.KRISHNAMURTHY// ஆமாம் சார்.. Arri என்னும் நிறுவனத்தின் டிஜிட்டல் திரைப்படக் கேமரா இது.

    இங்கே காணக்கிடைக்கும் படங்கள் எல்லாம்..ஒண்டிப்புலி என்னும் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளின் மாதிரிகள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,