முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘மணிரத்னம்’ படைப்புகள்: ஓர் உரையாடல்


ரங்கன்: உங்கள் முத்திரை என்று கருதப்பட்ட பல விஷயங்கள், மௌனராகத்திலேயே இடம்பெற்றிருந்தன. அவற்றில், இருள் செறிந்த பின்னணியில் செய்யப்பட்ட ஒளிப்பதிவு, மரபு சாரா நேர்த்தியான செட்கள் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.

ரத்னம்: மொழி தெரியாத, குளிர் நிறைந்த, ஊருக்குச் செல்லும் பெண்ணைப்பற்றிய கதை இது. முதலில் அவளுக்கு எல்லாமே அந்நியமாகப் படுகிறது. பின் அவள் அங்கேயே வாழப் பழகிக்கொள்கிறாள். அதனால்தான் டெல்லியைத் தேர்ந்தெடுத்தோம். இது ஒரு இண்டோர் (Indoor) படம் என்பதால் பி.சி.யும் நானும் சோதனை முயற்சிகளை மேற்கொள்ளத் தயாராக இருந்தோம். வெறும் நான்கு சுவர்களுக்குள் எடுத்திருக்கிறார்களே என்று யாரும் முகம் சுளித்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். இண்டோரும் அவுட்டோர் போல உயிரோட்டமாக இருக்கவேண்டும் என்று எண்ணினோம். ஏனெனில் படத்தில் நிறையக் கதாப்பாத்திரங்கள் இல்லை. அதனால் படம் நாடக பாணியில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அப்போதுதான் பி.சி., பேக் லைட்டிங் உத்தியைப் பயன்படுத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தார். அது மிக அற்புதமான, புத்திசாலித்தனமான யோசனை. தரணிதான் சென்னையில் அந்த வீட்டைக் கண்டுபிடித்துக் கொடுத்தார். அந்த வீடு முழுக்க சூரிய ஒளி படர்ந்திருந்ததால், அது பார்ப்பதற்கு டெல்லியில் இருக்கும் வீட்டைப்போல் காட்சியளித்தது. மேலும் அந்த வீட்டினுள், அவுட்டோரில் லைட்டிங் செய்வதுபோலவே இண்டோரில் செய்ய முழு வசதிகள் இருந்தன.

ரங்கன்: மேலும், (மணி) ரத்னச் சுருக்கமான வசனங்கள் இந்தப் படத்தில்தான் மக்களின் கவனத்துக்கு வந்தன.

ரத்னம்: வித்தியாசமாக, ஸ்டைலாக வசனங்களை எழுதவேண்டும் என்பதற்காக அப்படி எழுதவில்லை. கதை நகரத்தில் நடக்கிறது. படித்த, ஆங்கிலமயமான (ஓரளவுக்கு சிந்தனை அளவிலாவது) நகர மனிதர்கள் இப்படித்தான் பேசுவார்கள். என் முதல் படத்திலும் வசனங்கள் இப்படித்தான் அமைந்திருக்கும். ஏனெனில், அதுவும் நகர வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். ஆனால், அது கன்னடப்படம் என்பதால், அதன் வசனங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலு மகேந்திரா, வசனம்போல் தொனிக்காத வசனங்களை எழுதுவார். நானும், படத்தில் வரும் உரையாடல்கள் வசனம்போல் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். வசனங்கள், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்காக, யோசித்து எழுதியதுபோல் இருக்ககூடாது என்று கருதினேன். அவை இயல்பான உரையாடல்போல் இருக்கவேண்டும். அதனால், முடிந்தவரையில் வசனங்களை எளிமையாகக் கொடுக்க முயன்றேன். என்ன சொல்லவேண்டுமோ அதைமட்டுமே வசனங்களின் மூலம் சொல்ல முயன்றேன். காட்சிகளின் மூலமாகவும், நடிப்பின் மூலமாகவும், உணர்வுகளின் மூலமாகவும் இன்னும் பல விஷயங்களைச் சொல்ல முடியும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்குமட்டுமே வசனத்தைப் பயன்படுத்த வேண்டும்.

*

பரத்வாஜ் ரங்கனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, அரவிந்த் சச்சிதானந்தம் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்ற - ‘மணிரத்னம்’ படைப்புகள்: ஓர் உரையாடல் - என்னும் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு தலைமுறையையே கவர்ந்த படைப்பாளியின் பேட்டி என்பது எத்தகைய பொக்கிஷமாக இருக்கும் என்பதற்கு இப்புத்தகம் ஓர் உதாரணம். அவரது படைப்புகளின் மூலம் உந்தப்பட்டு திரைத்துறைக்கு வந்த அத்தனை நண்பர்களும் இப்புத்தகத்தின் வாயிலாக பல செய்திகளை, கலை நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளலாம். மணிரத்னத்தின் படைப்புகளிலிருக்கும் அரசியலில் சிலருக்கு உடன்பாடு இல்லையெனினும் அவரின் படைப்பாளுமையின் வாயிலாக அவர் கொடுத்த திரை அனுபவத்தை இங்கே யாரும் மறுத்து விடமுடியாது. அதிகம் பேசா மணிரத்னத்தைத்தான் நாம் அறிந்திருப்போம். இப்புத்தகத்தில் அப்பிம்பத்தை அவரே விரும்பி உடைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரின் அத்தனை படைப்புகளைப்பற்றியும் அதன் தயாரிப்பு நுணுக்கங்களைப்பற்றியும் நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார்.  ‘ஹிட்ச்காக் / ட்ரூஃபோ’உரையாடலைப் போன்று மிகுந்த மகிழ்ச்சியையும், அறிவார்ந்த சிந்தனையையும் தூண்டுகிற புத்தகமாக இது இருக்கிறது. தமிழில் திரைப்படம் சார்ந்து அரிதான முயற்சி இது. தாகம் கொண்ட ஒவ்வொரு படைப்பாளியையும் இப்புத்தகம் வசீகரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. திரைத்துறை நண்பர்கள் கண்டிப்பாக இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...