முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘மணிரத்னம்’ படைப்புகள்: ஓர் உரையாடல்


ரங்கன்: உங்கள் முத்திரை என்று கருதப்பட்ட பல விஷயங்கள், மௌனராகத்திலேயே இடம்பெற்றிருந்தன. அவற்றில், இருள் செறிந்த பின்னணியில் செய்யப்பட்ட ஒளிப்பதிவு, மரபு சாரா நேர்த்தியான செட்கள் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.

ரத்னம்: மொழி தெரியாத, குளிர் நிறைந்த, ஊருக்குச் செல்லும் பெண்ணைப்பற்றிய கதை இது. முதலில் அவளுக்கு எல்லாமே அந்நியமாகப் படுகிறது. பின் அவள் அங்கேயே வாழப் பழகிக்கொள்கிறாள். அதனால்தான் டெல்லியைத் தேர்ந்தெடுத்தோம். இது ஒரு இண்டோர் (Indoor) படம் என்பதால் பி.சி.யும் நானும் சோதனை முயற்சிகளை மேற்கொள்ளத் தயாராக இருந்தோம். வெறும் நான்கு சுவர்களுக்குள் எடுத்திருக்கிறார்களே என்று யாரும் முகம் சுளித்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். இண்டோரும் அவுட்டோர் போல உயிரோட்டமாக இருக்கவேண்டும் என்று எண்ணினோம். ஏனெனில் படத்தில் நிறையக் கதாப்பாத்திரங்கள் இல்லை. அதனால் படம் நாடக பாணியில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அப்போதுதான் பி.சி., பேக் லைட்டிங் உத்தியைப் பயன்படுத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தார். அது மிக அற்புதமான, புத்திசாலித்தனமான யோசனை. தரணிதான் சென்னையில் அந்த வீட்டைக் கண்டுபிடித்துக் கொடுத்தார். அந்த வீடு முழுக்க சூரிய ஒளி படர்ந்திருந்ததால், அது பார்ப்பதற்கு டெல்லியில் இருக்கும் வீட்டைப்போல் காட்சியளித்தது. மேலும் அந்த வீட்டினுள், அவுட்டோரில் லைட்டிங் செய்வதுபோலவே இண்டோரில் செய்ய முழு வசதிகள் இருந்தன.

ரங்கன்: மேலும், (மணி) ரத்னச் சுருக்கமான வசனங்கள் இந்தப் படத்தில்தான் மக்களின் கவனத்துக்கு வந்தன.

ரத்னம்: வித்தியாசமாக, ஸ்டைலாக வசனங்களை எழுதவேண்டும் என்பதற்காக அப்படி எழுதவில்லை. கதை நகரத்தில் நடக்கிறது. படித்த, ஆங்கிலமயமான (ஓரளவுக்கு சிந்தனை அளவிலாவது) நகர மனிதர்கள் இப்படித்தான் பேசுவார்கள். என் முதல் படத்திலும் வசனங்கள் இப்படித்தான் அமைந்திருக்கும். ஏனெனில், அதுவும் நகர வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். ஆனால், அது கன்னடப்படம் என்பதால், அதன் வசனங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலு மகேந்திரா, வசனம்போல் தொனிக்காத வசனங்களை எழுதுவார். நானும், படத்தில் வரும் உரையாடல்கள் வசனம்போல் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். வசனங்கள், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்காக, யோசித்து எழுதியதுபோல் இருக்ககூடாது என்று கருதினேன். அவை இயல்பான உரையாடல்போல் இருக்கவேண்டும். அதனால், முடிந்தவரையில் வசனங்களை எளிமையாகக் கொடுக்க முயன்றேன். என்ன சொல்லவேண்டுமோ அதைமட்டுமே வசனங்களின் மூலம் சொல்ல முயன்றேன். காட்சிகளின் மூலமாகவும், நடிப்பின் மூலமாகவும், உணர்வுகளின் மூலமாகவும் இன்னும் பல விஷயங்களைச் சொல்ல முடியும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்குமட்டுமே வசனத்தைப் பயன்படுத்த வேண்டும்.

*

பரத்வாஜ் ரங்கனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, அரவிந்த் சச்சிதானந்தம் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்ற - ‘மணிரத்னம்’ படைப்புகள்: ஓர் உரையாடல் - என்னும் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு தலைமுறையையே கவர்ந்த படைப்பாளியின் பேட்டி என்பது எத்தகைய பொக்கிஷமாக இருக்கும் என்பதற்கு இப்புத்தகம் ஓர் உதாரணம். அவரது படைப்புகளின் மூலம் உந்தப்பட்டு திரைத்துறைக்கு வந்த அத்தனை நண்பர்களும் இப்புத்தகத்தின் வாயிலாக பல செய்திகளை, கலை நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளலாம். மணிரத்னத்தின் படைப்புகளிலிருக்கும் அரசியலில் சிலருக்கு உடன்பாடு இல்லையெனினும் அவரின் படைப்பாளுமையின் வாயிலாக அவர் கொடுத்த திரை அனுபவத்தை இங்கே யாரும் மறுத்து விடமுடியாது. அதிகம் பேசா மணிரத்னத்தைத்தான் நாம் அறிந்திருப்போம். இப்புத்தகத்தில் அப்பிம்பத்தை அவரே விரும்பி உடைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரின் அத்தனை படைப்புகளைப்பற்றியும் அதன் தயாரிப்பு நுணுக்கங்களைப்பற்றியும் நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார்.  ‘ஹிட்ச்காக் / ட்ரூஃபோ’உரையாடலைப் போன்று மிகுந்த மகிழ்ச்சியையும், அறிவார்ந்த சிந்தனையையும் தூண்டுகிற புத்தகமாக இது இருக்கிறது. தமிழில் திரைப்படம் சார்ந்து அரிதான முயற்சி இது. தாகம் கொண்ட ஒவ்வொரு படைப்பாளியையும் இப்புத்தகம் வசீகரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. திரைத்துறை நண்பர்கள் கண்டிப்பாக இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,