முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர்- MAY 27 & 28


வணக்கம் நண்பர்களே..

இம்மாதம் 27-28 (மே) ஆம் தேதிகளில் கோயம்புத்தூரில் இரண்டு நாட்கள் ‘ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை’ நடப்பது உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.
அதற்கான வேலைகள் சிறப்பாக நடந்துக்கொண்டிருக்கிறது. பலர் ஆர்வமாக கலந்துக்கொள்கிறார்கள். பயிற்சிப்பட்டறை நடைபெறும் இடத்தை முன்பதிவு செய்துவிட்டோம். தமிழ்நாடு முழுவதுமிருந்தும் பல நண்பர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். கோயம்பத்தூருக்கும் பிறகு, தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.

டிஜிட்டல் வளர்ச்சியால், சென்னையை தர்த்து பிற பகுதிகளிலும் திரைப்படங்கள் எடுக்கும் முயற்சிகள் நடந்துக்கொண்டேதான் இருக்கிறது. ‘இண்டிபென்டண்ட்’ திரைப்படங்களை எடுக்கும் ஆர்வம் எல்லோரும் அதிகரித்திருக்கிறது. ஒரு திரைப்படத்தை எடுப்பதில் பல தொழில்நுட்ப கூறுகள் இருக்கிறது, அதில் ஒன்றான ஒளிப்பதிவு குறித்த ஒரு புரிதலை ஏற்படுத்திக்கொள்ள இப்பயிற்சி வகுப்புகள் உதவும் என்று நம்புகிறோம்.
ஒளிப்பதிவு குறித்த கனவு கொண்ட அத்தனை பேருக்கும் இது ஒரு அற்புதமான வாய்ப்பாக இருக்கும். இத்துறை குறித்தான புரிதலை இப்பயிற்சி வகுப்பு வழங்கும்.

மாணவர்கள், புகைப்படக்காரர்கள், இயக்குநர்கள், ஆவணப்பட இயக்குநர்கள்/ஒளிப்பதிவாளர்கள், திருமண விடியோகிராஃபர்கள் என பலருக்கும் இது பயன்படும். ஆர்வம் கொண்டவர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுங்கள். ஆர்வம் கொண்டவர்களுக்கு இப்பயிற்சி வகுப்பை பற்றி தகவல் தெரியபடுத்துங்கள்.

நன்றி..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,