முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Five C's of Cinematography: Motion Picture Filming Techniques


2009 -இலிருந்து ‘ஒளிப்பதிவு குறித்து’ என்னுடைய வலைப்பூவில் எழுதி வருகிறேன். பல தலைப்புகளில் கட்டுரைகளை எழுதிவிட்டேன். ஒளிப்பதிவுத்துறையில் இருக்கும் பல தொழில்நுட்பங்களை, விதிகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். பரவலாக எல்லாக்கட்டுரைகளுமே மிகுந்த வரவேற்பைப் பெற்றவைதான். ஆயினும், குறிப்பிட்ட ஒரு தலைப்பில் எழுதிய கட்டுரைகள் தனித்துவமான வரவேற்பையும், விருப்பத்தையும் பெற்றன. என் எழுத்தையும், என் வலைப்பூவையும் பற்றிப் பேசும் பலர், அக்கட்டுரைகளைக் குறிப்பிடாமல் இருப்பதே இல்லை. ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறையின் போதும் பலர் இதைப்பற்றி ஆர்வமாக கேட்கிறார்கள். இதற்கென தனியாக பயிற்சிப்பட்டறை நடத்த வேண்டுமென்றும் விரும்புகிறார்கள். ஒளிப்பதிவு தொழில்நுட்பப் புத்தகமான ‘THE FIVE C'S OF CINEMATOGRAPHY’ பற்றிய கட்டுரைகள்தான் அவை.

JOSEPH V. MASCELLI எழுதிய இப்புத்தகம், மிக முக்கியமானது. திரையாக்கம், திரைப்பட ஒளிப்பதிவு குறித்து முக்கியமான ஐந்து தலைப்புகளில் இப்புத்தகம் விரிகிறது. Camera Angles, Continuity, Cutting, Close-ups & Composition எனும் இத்தலைப்புகளில் விவரிக்கப்படும் விதிகள் ஒவ்வொன்றும் திரையாக்கத்தை இலகுவாக்க உதவுபவை.


எத்துறையாகினும், அனுபவ வாயிலாகக் கண்டுணர்ந்த பாடங்களே, விதிகளாக / வழிகாட்டியாக பின்பற்றப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். அவ்வகையில், முந்தைய தலைமுறைத் திரைமேதைகளின் திரைப்படங்களிலிருந்து கற்ற அனுபவப் பாடங்களின் வாயிலாக, திரைப்பட ஆக்கத்தில், எழுத்திலிருக்கும் கதையை திரைவடிவமாக மாற்றும்போது பின்பற்ற வேண்டிய, கவனிக்க வேண்டிய விதிகளை, வழிமுறைகளை இப்புத்தகத்தில் Joseph V. Mascelli விவரித்துள்ளார்.

ஒரு கதையை, பார்வையாளனுக்கு அதன் உணர்வு கெடாமல் கடத்துவதுதான் திரைப்பட ஆக்கத்தில் ஒவ்வொரு இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் சந்திக்கும் பெரிய சவால். ஒரு திரைப்படமென்பது பல துணுக்கு  ‘சுடுவுகளால்’(Shots) ஆனது. ஒவ்வொரு சுடுவையும் இணைத்து, ஒரு பூமாலையைப்  கோர்ப்பது போன்று ஒரு திரைப்படத்தை கோர்க்க வேண்டியதிருக்கிறது. இரண்டரை மணி நேரம் ஓடும் ஒவ்வொரு திரைப்படத்திலும் சராசரியாக 2000 சுடுவுகள் வரை இருக்கும். அதற்கு ஆயிரக்கணக்கான சுடுவுகளை (20000 to 1,00,000) படம் பிடிக்க வேண்டியதிருக்கிறது. எடுக்கப்பட்ட அச்சுடுவுகளைப் பயன்படுத்தி ஒரு முழுநீள திரைக்கதையை, அதன் தன்மை கெடாமல், உணர்வு கெடாமல், பார்வையாளன் இலகுவாக புரிந்துக்கொள்ளக் கூடிய வகையில் ஒன்றிணைத்துச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. எனில், அதை செய்வது எப்படி? மேலும், அதைச் சிறப்பாக செய்வது எப்படி.?

அதற்குத்தான், இப்புத்தகம் வழிகாட்டுகிறது.

ஒரு கதை நிகழும் தளத்தை, அதன் கதாப்பாத்திரங்களை, அவர்களிடையேயான உரையாடலை, சிறப்பாகவும், சரியாகவும், அதே நேரம் இலகுவாக புரிந்துக்கொள்ளும் வகையிலும் பார்வையாளனுக்கு கடத்தத் தேவையான கேமரா கோணம் (Camera Angles), கேமராவை வைக்க வேண்டிய இடம், காட்சிப்படுத்த வேண்டிய பார்வைக்கோணம் ஆகியவற்றில் துவங்கி, துண்டு துண்டாக எடுக்கப்படும் ஒவ்வொரு ‘சுடுவையும்’(Shots) எங்கே பிரிப்பது, அவற்றை எப்படி காட்சிப்படுத்துவது, பின்பு அவற்றை எப்படி இணைப்பது என்பவற்றையும், அவற்றிற்கிடையே இருக்கும் தொடர்ச்சியையும் (Cutting & Continuity) அதில் கவனிக்க வேண்டியவைகள் என பல நுணுக்கங்களையும் விவரிக்கிறார். மேலும், ஒவ்வொரு ‘சுடுவையும்’  எப்படி கம்போஸ் செய்வது, அதில் பின்பற்ற / கவனிக்க வேண்டிய நுணுக்கங்கள் யாவை என்பனவற்றையும் விவரிக்கிறார். அதேப்போல, ஒரு காட்சிக்கு மிக முக்கியமான ‘குளோசப்’(Close-ups) சுடுவுகளை எப்படி அமைப்பது, அதில் கவனிக்க வேண்டியவைகள், அதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் நுணுக்கங்களை Close-ups என்னும் தலைப்பில் விவரிக்கிறார்.

இப்புத்தகத்தில் விவரிக்கப்படும் ஒவ்வொரு தலைப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகள். திரைப்பட ஆக்கத்தில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. தவற விடக்கூடாத புத்தகம். விளக்கங்களுக்கு ஏற்ற படங்களையும் இணைத்திருப்பதனால், ஆங்கிலத்தில் இருப்பினும் படிக்க இலகுவான புத்தகம் தான். திரைத்துறை சார்ந்த அத்துனை நண்பர்களுக்கும் இப்புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.



FREE Delivery. Cash on Delivery eligible.( நம்மிடம் வந்த பிறகு பணம் கொடுக்கலாம். ஆன் லைனில் வாங்க, கிரடிட் கார்டோ, டெபிட் கார்டோ இல்லாதவர்கள், இச்சேவையை பயன்படுத்தலாம்)

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,