முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Five C's of Cinematography: Motion Picture Filming Techniques


2009 -இலிருந்து ‘ஒளிப்பதிவு குறித்து’ என்னுடைய வலைப்பூவில் எழுதி வருகிறேன். பல தலைப்புகளில் கட்டுரைகளை எழுதிவிட்டேன். ஒளிப்பதிவுத்துறையில் இருக்கும் பல தொழில்நுட்பங்களை, விதிகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். பரவலாக எல்லாக்கட்டுரைகளுமே மிகுந்த வரவேற்பைப் பெற்றவைதான். ஆயினும், குறிப்பிட்ட ஒரு தலைப்பில் எழுதிய கட்டுரைகள் தனித்துவமான வரவேற்பையும், விருப்பத்தையும் பெற்றன. என் எழுத்தையும், என் வலைப்பூவையும் பற்றிப் பேசும் பலர், அக்கட்டுரைகளைக் குறிப்பிடாமல் இருப்பதே இல்லை. ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறையின் போதும் பலர் இதைப்பற்றி ஆர்வமாக கேட்கிறார்கள். இதற்கென தனியாக பயிற்சிப்பட்டறை நடத்த வேண்டுமென்றும் விரும்புகிறார்கள். ஒளிப்பதிவு தொழில்நுட்பப் புத்தகமான ‘THE FIVE C'S OF CINEMATOGRAPHY’ பற்றிய கட்டுரைகள்தான் அவை.

JOSEPH V. MASCELLI எழுதிய இப்புத்தகம், மிக முக்கியமானது. திரையாக்கம், திரைப்பட ஒளிப்பதிவு குறித்து முக்கியமான ஐந்து தலைப்புகளில் இப்புத்தகம் விரிகிறது. Camera Angles, Continuity, Cutting, Close-ups & Composition எனும் இத்தலைப்புகளில் விவரிக்கப்படும் விதிகள் ஒவ்வொன்றும் திரையாக்கத்தை இலகுவாக்க உதவுபவை.


எத்துறையாகினும், அனுபவ வாயிலாகக் கண்டுணர்ந்த பாடங்களே, விதிகளாக / வழிகாட்டியாக பின்பற்றப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். அவ்வகையில், முந்தைய தலைமுறைத் திரைமேதைகளின் திரைப்படங்களிலிருந்து கற்ற அனுபவப் பாடங்களின் வாயிலாக, திரைப்பட ஆக்கத்தில், எழுத்திலிருக்கும் கதையை திரைவடிவமாக மாற்றும்போது பின்பற்ற வேண்டிய, கவனிக்க வேண்டிய விதிகளை, வழிமுறைகளை இப்புத்தகத்தில் Joseph V. Mascelli விவரித்துள்ளார்.

ஒரு கதையை, பார்வையாளனுக்கு அதன் உணர்வு கெடாமல் கடத்துவதுதான் திரைப்பட ஆக்கத்தில் ஒவ்வொரு இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் சந்திக்கும் பெரிய சவால். ஒரு திரைப்படமென்பது பல துணுக்கு  ‘சுடுவுகளால்’(Shots) ஆனது. ஒவ்வொரு சுடுவையும் இணைத்து, ஒரு பூமாலையைப்  கோர்ப்பது போன்று ஒரு திரைப்படத்தை கோர்க்க வேண்டியதிருக்கிறது. இரண்டரை மணி நேரம் ஓடும் ஒவ்வொரு திரைப்படத்திலும் சராசரியாக 2000 சுடுவுகள் வரை இருக்கும். அதற்கு ஆயிரக்கணக்கான சுடுவுகளை (20000 to 1,00,000) படம் பிடிக்க வேண்டியதிருக்கிறது. எடுக்கப்பட்ட அச்சுடுவுகளைப் பயன்படுத்தி ஒரு முழுநீள திரைக்கதையை, அதன் தன்மை கெடாமல், உணர்வு கெடாமல், பார்வையாளன் இலகுவாக புரிந்துக்கொள்ளக் கூடிய வகையில் ஒன்றிணைத்துச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. எனில், அதை செய்வது எப்படி? மேலும், அதைச் சிறப்பாக செய்வது எப்படி.?

அதற்குத்தான், இப்புத்தகம் வழிகாட்டுகிறது.

ஒரு கதை நிகழும் தளத்தை, அதன் கதாப்பாத்திரங்களை, அவர்களிடையேயான உரையாடலை, சிறப்பாகவும், சரியாகவும், அதே நேரம் இலகுவாக புரிந்துக்கொள்ளும் வகையிலும் பார்வையாளனுக்கு கடத்தத் தேவையான கேமரா கோணம் (Camera Angles), கேமராவை வைக்க வேண்டிய இடம், காட்சிப்படுத்த வேண்டிய பார்வைக்கோணம் ஆகியவற்றில் துவங்கி, துண்டு துண்டாக எடுக்கப்படும் ஒவ்வொரு ‘சுடுவையும்’(Shots) எங்கே பிரிப்பது, அவற்றை எப்படி காட்சிப்படுத்துவது, பின்பு அவற்றை எப்படி இணைப்பது என்பவற்றையும், அவற்றிற்கிடையே இருக்கும் தொடர்ச்சியையும் (Cutting & Continuity) அதில் கவனிக்க வேண்டியவைகள் என பல நுணுக்கங்களையும் விவரிக்கிறார். மேலும், ஒவ்வொரு ‘சுடுவையும்’  எப்படி கம்போஸ் செய்வது, அதில் பின்பற்ற / கவனிக்க வேண்டிய நுணுக்கங்கள் யாவை என்பனவற்றையும் விவரிக்கிறார். அதேப்போல, ஒரு காட்சிக்கு மிக முக்கியமான ‘குளோசப்’(Close-ups) சுடுவுகளை எப்படி அமைப்பது, அதில் கவனிக்க வேண்டியவைகள், அதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் நுணுக்கங்களை Close-ups என்னும் தலைப்பில் விவரிக்கிறார்.

இப்புத்தகத்தில் விவரிக்கப்படும் ஒவ்வொரு தலைப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகள். திரைப்பட ஆக்கத்தில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. தவற விடக்கூடாத புத்தகம். விளக்கங்களுக்கு ஏற்ற படங்களையும் இணைத்திருப்பதனால், ஆங்கிலத்தில் இருப்பினும் படிக்க இலகுவான புத்தகம் தான். திரைத்துறை சார்ந்த அத்துனை நண்பர்களுக்கும் இப்புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.



FREE Delivery. Cash on Delivery eligible.( நம்மிடம் வந்த பிறகு பணம் கொடுக்கலாம். ஆன் லைனில் வாங்க, கிரடிட் கார்டோ, டெபிட் கார்டோ இல்லாதவர்கள், இச்சேவையை பயன்படுத்தலாம்)

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...