முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Amazon Kindle - டிஜிட்டல் வடிவில் புத்தகங்கள் படிக்க


அமேசானில் வாங்கும் புத்தகத்தை எப்படி படிப்பது என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்காக இது.

அமேசான் நிறுவனம் புத்தகங்களைப் படிப்பதற்காக, Kindle என்னும் கையடக்க கருவி ஒன்றை வடிவமைத்திருக்கிறது. இது ஏறக்குறைய ஒரு ‘Tablet’ போன்றதுதான். இது பல வகைகளாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாம் வாங்கும் புத்தகங்களை இதில் படிக்கலாம். மற்றவர்களுக்கு இமெயிலில் பகிரவோ, பரப்பவோ முடியாது. ஆகையினால், நம் புத்தகங்கள் கள்ளச் சந்தையில் பரவி விடும் என்ற பயமில்லை. உலகெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கானப் புத்தகங்கள் இதில் கிடைக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் தினமும் இதில் புத்தகங்களை படிக்கிறார்கள். புத்தகம் படிப்பதை நவினமாக்கியிருக்கிறார்கள். படிப்பதற்கும், சேமிப்பதற்கும் இலகுவானது. 1,400 புத்தகங்களுக்கும் மேலாக இதில் சேமிக்கலாம் என்கிறார்கள். நம்முடைய வசதிக்கேற்ப வெவ்வேறு மாடல்களை வாங்கிக்கொள்ளலாம்.


Ipad, Iphone, Samsung Tab, Lenovo Tab.. என பிற நிறுவனங்களின் டேப்லெட்டுகளை(Tablets) பயன்படுத்துவோர்கென ‘Kindle App’ தனியாக கிடைக்கிறது. Ipad, Iphone பயன்படுத்துபவர்கள் Apple App Store- இலும், ஆண்ட்ராயிடு டேப்களை பயன்படுத்துபவர்கள் கூகுளின் Play Store-இலும், Mac மற்றும் Windows-க்கும் ‘Kindle App’-ஐ இலவசமாக தரவிரக்கம் செய்துக்கொள்ளலாம். அமேசானில் வாங்கும் புத்தகங்கள் தானாகவே இதில் தரவிறக்கம் செய்துக்கொள்ளும்.


என்னுடைய ‘ஒளி எனும் மொழி’ புத்தகத்தை, பல வெளிநாட்டு நண்பர்கள் எங்கே வாங்குவது என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அச்சடித்த புத்தகங்களை இங்கிருந்து அனுப்பி வைப்பது என்பது புத்தக விலையைப்போல இரண்டு மூன்று மடங்கு செலவு பிடிப்பதாக இருக்கிறது. ஆகையினால், வெளிநாட்டிலிருக்கும் நண்பர்கள் படிப்பதற்கு வசதியாக டிஜிட்டல் வடிவத்தில் அப்புத்தகத்தை தருவது நல்லது என்று நினைத்தோம். அது இப்போதுதான் நடந்திருக்கிறது.

அச்சடித்த புத்தகத்தை விட இதில் படிப்பது இலகுவானது. தேவைக்கேற்ப Font Size-ஐ பெரிதுப்படுத்திக்கொள்ளலாம். தேவையான பக்கங்களை குறித்து வைத்துக்கொள்ளலாம். முக்கியமென்று கருதுவதை அடிக்கோடிடலாம் (Highlight). தேவையான பக்கத்தை மட்டும் ஃபிண்ட் செய்துக்கொள்ளலாம். உங்கள் கணினி, செல்ஃபோன், டேப் என எல்லா கருவிகளிலும் வசதிக்கேற்ப படிக்கலாம். வீட்டில் இருக்கும் போது கணினியில் படிப்பவர்கள், வெளியே செல்லும்போது செல்ஃபோனிலோ, டேபிலோ விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம். அச்சடித்த புத்தகத்தைப்போல சுமந்து திரிய வேண்டியதில்லை.

நண்பர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள், ஆர்வம் கொண்டவர்களுக்கு தகவல் சொல்லுங்கள். நன்றி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,