முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Image Workshops Website Launched by Director MYSSKIN




ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை இணையத்தளம்:

இயக்குநர் திரு.மிஷ்கின் அவர்கள் இன்று http://imageworkshops.in என்ற எங்கள் வலைத்தளத்தை துவங்கி வைத்தார்.

எனது வலைப்பூவில் நான் தொடர்ந்து எழுதிவரும், சினிமா ஒளிப்பதிவு சார்ந்த கட்டுரைகளை வாசிக்கும் நண்பர்கள் பலரும் பல சந்தர்ப்பங்களிலும் முன்வைக்கும் கோரிக்கைதான், ஒளிப்பதிவு குறித்தான பயிற்சிப் பட்டறைகளை நடத்துங்கள் என்பது. சில பல ஆண்டுகளாகவே இந்த கோரிக்கை இருந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் இரண்டு பயிற்சிப்பட்டறைகள் நடத்தினோம். மேலும் பல்வேறு நகரங்களிலிருந்தும் பயிற்சிப்பட்டறைக்கான விருப்பம் வருகிறது.



அதற்கான முதற்படியாக, இத்தளத்தை வடிவமைத்திருக்கிறோம். இதில், பாடங்கள் தனித்தனி வகுப்புகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு விருப்பமான வகுப்பை தேர்ந்தெடுங்கள், உங்களைப்பற்றிய தகவல் மற்றும் எந்த பகுதியில் வசிக்கிறீர்கள் என்ற தகவலையும் கொடுங்கள். அதன் அடிப்படையில், வகுப்பையும், இடத்தையும் முடிவு செய்ய எங்களுக்கு ஏதுவாக இருக்கும். இது ஒருவிதமான கருத்துக் கணிப்புக்குத்தான். தேவையை அறிந்துக்கொள்ளுவதற்காகத்தான். விருப்பமான பிரிவு, கற்போர் எண்ணிக்கை, மற்றும் பொதுவான இடத்தேர்வுகள் இசைந்துவரும் பட்சத்தில், வகுப்புகளை விரைவில் துவக்க திட்டமிடலாம்.








வருங்காலத்தில், ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறைகள் குறித்த தகவல்கள், Tutorials, புதிய தொழில்நுட்பங்கள், புதிய கருவிகளைப் பற்றிய அறிமுகம், பயனுள்ள சுட்டிகளும் அடுத்தடுத்து இத்தளத்தில் இடம் பெறும்.

திரு.மிஷ்கின் அவர்களுக்கும், திரு.அருண் அவர்களுக்கு நன்றி.

360° Video - Imageworkshops Web Launch - 23/04/2017


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...