முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’




காலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல. மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு..
காலம் என்பது ஆறுபோல் எப்போதும் ஒரே திசை நோக்கி ஓடக்கூடியது அல்ல! காலமானது.. ஒரு தடாகத்தில் கல்லை எறிந்தால் நீரில் அடுத்தடுத்து வளையங்களாக எழும் அலைகளைப் போன்றது

இவ்வரிகளை அண்மையில் படித்த ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் பார்த்தேன். ஆச்சரியமாக இருக்கிறது. நவீன அறிவியல் சொல்லும் அதே கருத்தைக்கொண்டு அண்மையில் ஒரு திரைப்படமும் பார்த்தேன். இரண்டுமே சிறுவர்களுக்கானது என்று நம்பப்படும்(தவறாக) பிரிவைச்சார்ந்த கலை படைப்புகள்

தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்என்னும் காமிக்ஸ் தான் அந்த அற்புத புத்தகம். Vikings- களை அடிப்படையாக கொண்ட இக்காமிக்ஸ், மற்ற காமிக்ஸிலிருந்து தனித்துவமானது. கதை சொல்லும் போக்கு, அதிலிருக்கும் ஃபேண்டஸி, அதற்கு வரையப்பட்ட ஓவியங்கள் என இத்தொடர் ஒரு கவித்துவமானதும் கூட. இதுவரை காமிக்ஸ் படிக்காதவர்களுக்கு கூட இப்புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்



அடுத்து.. அண்மையில் வெளியாகிய ஸ்பைடர்மேன் திரைப்படமான ‘SPIDER MAN INTO THE SPIDER VERSE’ திரைப்படம்தான் நான் குறிப்பிட்ட காலம் தொடர்பான திரைப்படம். பல்வேறு காலத்திலிருந்து வந்து சேரும் பல ஸ்பைடர்மேன்களைப் பற்றியப்படம் இது. பொழுதுபோக்குதான் ஆதாரம் எனினும், அறிவியல், ஆன்மீகம், இருப்பு, வாழ்வு குறித்தான பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தவல்ல திரைப்படம் இது. பலரும் இது குழந்தைகளுக்கானப்படம் என்று தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் அது அப்படி அல்ல. திரைப்படங்களின் மீது ஆர்வம் கொண்ட அத்துணை நண்பர்களுக்கும் இத்திரைப்படத்தை பரிந்துரைக்கிறேன்




மேலும்… Netflix இல் ‘VIKINGS’ என்றொரு நீண்டதொரு தொடர் இருக்கிறது. வரலாறும் புனைவும் கலந்த அத்தொடர் மற்றொரு அற்புதம். History Channel இல் தயாரிப்பான இது. போர்க்கலம், வரலாறு, கலாச்சாரம், ஆன்மீகம், காதல், நம்பிக்கை, துரோகம், இரத்தம் என நிரம்பிக்கிடக்கும் இத்தொடர், அதையும் தாண்டி பல அற்புத கணங்களை கொண்டிருக்கிறது. வரலாற்றின் ஊடாக ஒரு புதிய பார்வையை இத்தொடர் உண்டாக்கும். தவற விடாதீர்கள் நண்பர்களே..! 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...