முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Director’s Viewfinder



திரைப்பட ஆக்கத்தில், ஒரு காட்சியை பல்வேறு ஷாட்டுகளாக பிரித்துதான் படமாக்குகிறோம். அதில் ஒவ்வொரு ஷாட்டுக்கும் வெவ்வேறான லென்ஸை பயன்படுத்துகிறோம் என்பதும் நாம் அறிந்ததுதான். குறிப்பிட்ட ஷாட்டுக்கு எந்த லென்ஸை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்ய.. அதாவது, எந்த Focal Lenght lens-ஐப் பயன்படுத்தலாம் என்பதை, கேமராவையும் லென்ஸையும் கொண்டு முடிவு செய்வதற்கு முன்பாக, இந்த Director’s View Finder என்னும் எளிய கருவியைக்கொண்டு முடிவு செய்யலாம்.

நாம் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தின் Aspect Ratio -வை அமைத்து விட்டு(1:2.35 or 16:9), கேமராவை வைக்க விரும்பும் இடத்திலிருந்து, இக்கருவியின் மூலம் பார்த்து, அதை ஸூம் லென்ஸைப் போன்று முன்னும் பின்னும் மாற்றி அமைத்து, நமக்கு தேவையான லென்ஸ் எது என்பதை முடிவு செய்யலாம். மேலும்,  குறிப்பிட்ட கோணத்தை முடிவு செய்யவும் இக்கருவி உதவும்.

வெறும் கண்களால் பார்ப்பதை விட, இக்கருவியின் மூலம் பார்க்கும்போது, கேமராவில் லென்ஸைப் பொருத்தி பார்ப்பது போன்று, நமக்கு தேவையான பரப்பளவை (Frame) பார்க்கலாம். இதன் மூலம், நமக்கு தேவையான லென்ஸ் எது என்பதை,  இக்கருவின் மேல் பகுதியில் குறிக்கப்பட்டிருக்கும் எண்களிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம். எளிய கருவி.. மிக பயனுள்ளது.

இம்மாதம் (03.02.19) அன்று நடந்த Image Workshop இன் 'Lens Basics' பயிற்சிப்பட்டறையில், இக்கருவியைப்பற்றி பார்த்தோம். கலந்துக்கொண்டவர்கள் அதை பயன்படுத்தியும் பார்த்தனர்.





இயக்குநர்களுக்கும், ஒளிப்பதிவாளர்களுக்கும் பயன்படும்.

இதில் பல்வேறு வகை இருக்கிறது..

சிறியது… அப்படியே பயன்படுத்தலாம். இதிலிருந்துக்கும் குறை, Depth of Field-யை கணிக்க முடியாது.




இக்கருவியை வாங்க 



பெரியது.. நாம் பயன்படுத்து, லென்ஸை இதில் பொறுத்திதான் பார்க்க வேண்டும். ஒரு லென்ஸின் மூலம் பார்த்தால் என்ன Depth of Field தெரியுமோ அதே அப்படியே பார்க்கலாம். விலையும் அதிகம்.



Phone App - பயன்படுத்தி பார்க்கும் மாடல்




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...