முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

LEARN TO MAKE A SHORT FILM - Cinematography Workshop @Kotagiri on 10, 11, 12 Aug 2019


ஒரு கல்லில் இரண்டு மாங்கா.. கேள்விப்பட்டிருக்கிறீர்களா..!?

அது இதுதான். அடுத்த மாதம் (ஆகஸ்ட் 2019) 10,11,12 ஆம் தேதிகளில், கோத்தகிரியில் நாம் ஒரு பயிற்சிப்பட்டறையை Learn to make a short film என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருக்கிறோம்

இப்பயிற்சிப்பட்டறை இரண்டு விதங்களில் பயன் தரும்.

1. ஒரு குறும்படத்தை எப்படி எடுப்பது. அதற்கான ஒளிப்பதிவு தொழில்நுட்பங்கள் யாவை. சிறிய செலவில், கிடைக்கின்ற பொருளில், சூழலில், ஒளியில், நேர்த்தியான ஒரு குறும்படத்தை எப்படி எடுப்பது என்ற நுட்பத்தை செயல்முறை விளக்கமாக செய்து பார்த்து கற்றுக்கொள்ளப் போகிறோம். மூன்று நாட்களுக்கு படபிடிப்பை, கோத்தகிரி பகுதிகளில் நடத்த இருக்கிறோம். ஒரு சிறிய குழுவாக இதனை செய்திடப் போகிறோம்

2. கோத்தகிரி போன்ற ஒரு மலைப்பிரதேசத்தின் அழகை ரசித்திடப்போகிறோம். மொதுவாக மலை வாசத்தளங்களுக்கு நாம் சுற்றுலாப்போகும் போது, வழக்கமான ஜன நெருக்கடியான (Tourist Spots) பகுதிகளுக்குத்தான் சென்று வருவோம். ஆனால்.. இந்த மூன்று நாட்களும் ஜன நெருக்கடி இல்லா, கோத்தகிரியின் உட்பகுதிகளுக்கு செல்லப்போகிறோம். அழகிய மலை முகடுகள், சிறு நீரோடைகள், அருவி, கிராமம், மனிதர்கள் என ஒரு பசுமையான புல்வெளி தேசத்திற்கு சென்று வரப்போகிறோம்

இதைத்தான் சொல்லுகிறேன். ஒரு கல்லில் இரண்டு மாங்க என்று..!

கற்றல் ஒருபுறம்.. சுற்றுல ஒருபுறம்..!

நண்பர்கள் குடும்பத்தோடும் வரலாம். நாம் கற்றுக்கொள்ளுவோம். அவர்கள் இயற்கையை ரசிக்கட்டும். மேலும் பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்திருக்கும் நாட்கள் மூன்று விடுமுறை நாட்கள் தான். சனி, ஞாயிறு மற்றும் திங்கள். திங்கள் அன்று பக்ரித் வருகிறது. அதனால், அன்று விடுமுறைதான். குடும்பத்தோடு வர விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள். +91 98406 32922

ஆர்வம் கொண்டவர்கள் உடனடியாக பதிவு செய்துக்கொள்ளுங்கள். குறைவான ஆட்களையே அழைத்துச் செல்வதாக உத்தேசம். Limited Seatting only.


Learn How to make a short film 
Cinematography Workshop 
@Kotagiri on 10, 11, 12 Aug 2019

Learn how to do SHOT DIVISIONS and to shoot in a flow with CONTINUITY. 
Learn how to CONTROL and enrich the story with AVAILABLE LIGHTS. 
Learn how to transform your storyline into VISUAL. 
Have a hands-on experience with PRACTICAL SHOOT.
Combo Experience of LEARN n TOUR.
Day shoot & Night discussion at the CAMPFIRE.


‘Making a short film in a short film workshop’

Fee: 9999/- 

EARLY-BIRD DISCOUNT
Pay before July 30, and enjoy a discount price of ₹8,999/- Hurry!

To Register 
+91 98406 32922
+91 94864 04832



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,