முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Foreground Interest and Depth




Foreground Interest and Depth: Including some foreground interest in a scene is a great way of adding a sense of depth to the scene. Photographs are 2D by nature. Including foreground interest in the frame is one of a number of techniques to give the scene a more 3D feel. ஒரு காட்சியை படம் பிடிக்கும் போது, Foreground-இல் ஏதோனும் ஒன்றை இடம்பெற செய்யும் போது, அக்காட்சி சுவாரசியமாகும் என்கிறார்கள். இப்படங்களில், படம் B-இல், அந்திப்பொழுதின் வானமும், தூரத்து மலையின் வடிவமும், ஒன்றைப்புள்ளியாய் ஒளிரும் நட்சத்திரமும், தூரத்தில் தெரியும் விளக்கொளியும் நமக்கு அழகைத் தருகின்றன. ஆயினும், அக்காட்சியின் முன் பக்கத்தில் , ஒரு வீட்டையும் இணைக்கும் போது (படம் A), அக்காட்சி இன்னமும் சுவாரசியமானதாக, கவர்ச்சிகரமானதாக மாறுவதாக, புகைப்படயயலின் விதிகள் சொல்லுகிறது. அது புகைப்படத்துறையோ, ஓவியத்துறையோ அல்லது ஒளிப்பதிவுத்துறையோ… இத்துறைகளில் பின்பற்றப்படும் சில ‘Composition Techniques’ உண்டு. இவைகள், ஒரு வகையான வழிகாட்டி தான். இப்படி செய்வதன் மூலம், உங்களின் காட்சியை சுவாரசியமானதாக்கலாம் என்ற வழி காட்டி இது. பல்வேறு புகைப்படக்கலைஞர்களால், பல்வேறு புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, அதில் எது சுவாரசியமானதாகப்படுகிறது? அது ஏன்? என்ற அனுபவத்தின் அடிப்படையில் சொல்லப்படும் வழிகாட்டி நுட்பங்கள் இவை. இதை அப்படியே பின்பற்ற வேண்டுமென்பதில்லை. பின்பற்றினால், உங்கள் புகைப்படங்கள் சுவாரசியமாகும் என்பதுதான், இதன் பலம். கமல் சொன்னதைப்போன்றுதான்... “கடவுள் இல்லைன்னு சொல்லல.. இருந்தால் நல்லதுன்னுதான் சொல்றேன்” “பின்பற்ற வேண்டுமென்று சொல்லவில்லை.. பண்ணினா நல்லதுன்னுதான் சொல்றேன்” 😄😁😜 --------------------------------- இரண்டு படங்களில் வித்தியாசத்தை, சிலர் குறிப்பிட்டது மட்டும் இங்கே B பொதுவாக தனிமையும் அமைதியான சூழலையும் நான் விரும்புவேன் ஆகையால் எனக்கு B பிடித்திருக்கிறது -- A - the interesting foreground sets the context brilliantly. 👌 -- B - In a frame as B such great than A As my knowledge of framework is smart coz without this Building( கட்டடம் சட்டக இடைத்துருத்தலாகிறது)🔥 -- A is my option. It tells a story. In fact some uniqueness to that particular story. Though some might argue option B is also telling a story... It's a generic story, that could fit any story. A's building light n texture adds a beautiful blocking to the scene. 💕 -- முதல் படம் ஆப்ஜெக்ட் எனும் வாழ்விடம் பின்னணியில் இயற்கை சார்ந்த வாழ்விடங்கள் கொண்டதில் தனித்தன்மை மற்ரும் தனிமை சூழல் இருப்பினும் இப்படி எடுக்கப்படும் படங்களே மிக சிறந்த படமே மனதில் ஆழமான மகிழ்ச்சியை தருகிறது...! -- B - பரந்த வானமும் இருண்ட ஊரும் தடையில்லாமல் நம் மனதிற்கு நெருக்கமாக்குகிறது. இயற்கையின் வண்ணங்களும், ஒற்றை நிலவும் வீட்டில் ஒளிரும் ஒற்றை விளக்கொளியும் கூடுதல் கவித்துவத்தை ஏற்படுத்துகிறது. மகிழ்வோ துயரமோ காதலோ நம் மனதின் எவ்வகை உணர்வுகளுக்கும் எளிதாய் பொருந்திக்கொள்ளும் அழகிருக்கிறது. ...இன்னும் இப்படி நிறைய சொல்லிக்கொண்டேபோகலாம் தல... -- மரம் அல்லது கட்டிடம் ஃப்ரேமின் ஓரத்தில்.. குறிப்பாக.. இடது ஓரத்தில்..வருவது ஃப்ரேமின் அழகை கூட்டும். - A -- படம் A எனக்கு பிடித்திருக்கிறது, காரணங்கள். B.வெறுமை நிறந்த வானம், கருமையான நிலப்பரப்பும். தொலைதூர விடிவெள்ளியும் முடிவில்லா சிந்தனையை வளர்க்கிறது. A. கட்டிடத்தின் கவர்ச்சியான பகுதியாக இல்லை என்றாலும், ஜன்னலில் தெரியும் மஞ்சள் வெளிச்சம் கம்பிகளின் நிழல் உயிரோட்டமாக உள்ளது. கடல் சூழ்ந்த நிலம் போன்ற ஒரு பூகோள அமைப்பை உணர முடிகிறது. விடிவெள்ளி, ஜன்னல் ஒளி, தெரு விளக்கு மூன்று மூன்று வெளிச்சங்கள் ஒரு முக்கோண புள்ளியில் இணைவதுபோல உள்ளது. படம் A - முழுமையான ஒளியோவியம். படம் B - முடிவடையாத ஓவியம். இரண்டு படங்களும் அதிகாலை விடியலாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது( சரியாக தெரியவில்லை). பொதுவாக B தனியாக இருந்தால் அது நன்றாக இருக்கிறது என்றே சொல்ல தோன்றும். #photographyquiz #imageworkshops #vijayarmstrong

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...