முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்தது இனிது…! | 04



என்னுடைய சிறுவயதிலிருந்து, நான் மறக்காமல், நினைவில் வைத்திருக்கும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். இத்தனை வயதுக்கு அப்புறம், நினைக்கும் போதெல்லாம் மனமெங்கும் பரவசம் தருபவர்கள். அவர்களை நான் ஒருபோதும் சந்தித்தது இல்லை. என்றாலும், அவர்களே என்னுடைய சிறந்த நண்பர்கள்..! 

புரியவில்லையா…? 😀


அதில் முதல் நண்பன் பேரு… ‘கபீஷ்


ஆங்அவனேதான். குட்டி குரங்கு நண்பன். அமர் சித்திரைக்கதைகளிலும், பூந்தளிர் இதழ்கள் மூலமும் வந்து சேர்ந்த நண்பன் அவன். வளரும் தன்மைக்கொண்ட வாலை வைத்துக்கொண்டு அவன் போடும் ஆட்டங்களை மறக்க முடியுமா? இப்போதும், எங்கே குரங்கு குட்டிகளைப்பார்த்தாலும் அவன் ஞாபகம் வந்து விடும்


கூடவே பல நண்பர்கள்


காக்கா காளி, புலி புண்யகோடி என காட்டு நண்பர்கள் ஒருபுறம் என்றால்சுப்பாண்டி, தபால்கார பரமு, வேட்டைக்காரர்(பெயர் மறந்துவிட்டது) என பெரும் நண்பர்கள் வட்டமே இருந்தது. 80களில் சிறுவர்களாக இருந்தவர்களைக் கேட்டுப்பாருங்கள். இவர்கள் எங்களின் பொழுதுகளை எத்தனை சுவாரசியமாக்கினார்கள் என்று சொல்லுவார்கள்


நகைச்சுவை ததும்பும் கதைகள், மெல்லியதாக இழையோடும் அறறெறி, சுவாரசியமான கதாப்பாத்திரங்கள் என குழந்தைகள் உலகத்து பொக்கிஷங்கள் அவை


அம்புலிமாமா, பூந்தளீர் புத்தகங்கள் ஒருபுறம் என்றால், தினமலர் நாளேட்டுடன், வெள்ளிகிழமை இணைப்பாக வந்தசிறுவர்மலர்இன்னொரு அற்புதம்


மகாபாரதம், இராமாயிணம், பீர்பால், தெனாலிராமன் என வகைவகையான கதைகளை வாரம்தோறும் கொண்டு வந்து சேர்க்கும்


உயிரைத்தேடிஎன்றொரு கதைத்தொடர், சிறுவர்மலரில் வந்தது. எதிர்காலத்தில், அணுகுண்டு, வைரஸ் போன்ற காரணங்களால் மனித கூட்டம் அழிந்துவிடுகிறது. இரத்தத்தில் ஏதோ ஒரு ஸ்பெஷல் தன்மைக்கொண்ட ஒரு சிறுவன் மட்டும் உயிர் பிழைக்கிறான். அவன் தன்னைபோல வேறு யாரேனும் உயிர் பிழைத்திருக்கிறார்களா என தேடி, இந்த உலகம் முழுவதும் சுற்றுவதே கதை. அவனுக்கு ஆபத்து, மிருகங்களாலும், வைரஸ் தாக்குதலால், மரணம் அடையாமல்கொடுரமான உருவத்தையும், குணத்தையும் பெற்றுவிட்ட சில மனிதர்களாலும் வருகிறது. தன்னை காத்துக்கொள்ள, துப்பாக்கி, கார், ஏரோபிளேன், காற்றடைத்த பெரும் பலூன் என பலவற்றை அவன் பயன்படுத்துகிறான். வழியில் அவனைப்போலவே, தப்பிப்பிழைத்த சில சிறுவர்களையும் காண்பான். அவர்களோடு இணைந்து உயிர் வாழ்ந்திட முயல்வதே கதை


தற்போதைய சூழலைப் பார்க்கும்போது, ஏனோ அக்கதை தான் ஞாபகம் வருகிறது. மறக்க முடியாத கதை அது. பெரும் ஆபத்துகளையும், பெரும் சாகாசங்களை அடிப்படையாக கொண்டு பின்னப்பட்ட அக்கதை, அடிப்படையில் அன்பையும், தோழமையும், கூடி வாழ்ந்தலையும் போதிக்கிறது


உண்மையில்சிறுவர்களா இருப்பதில் தான், எத்தனை சௌகரியம் இருக்கிறதுஇல்லையா


அது ஒரு காலம். கதைகளின் காலம்…! கற்பனை உலகத்தில் பறந்து திரிந்த காலம். கையில் ஒருபுத்தகம் இருந்தால் போதும், கால இயந்திரத்தில் ஏறியது போன்றுராஜாக்கள் காலத்துக்கும், வான்வெளிக்கும், காடுகளுக்கும் நொடியில் பயணம் செய்யலாம். சுற்றித்திரிந்து விட்டு திரும்பி வந்தால்வீட்டில் நேரத்திற்கு திண்பண்டமும், சாப்பாடும் கிடைக்கும். நிம்மதியாய் சாப்பிட்டுவிட்டு உறங்கப்போகலாம் அல்லது மீண்டும் கற்பனை லோகத்தில் உலாவப்போகலாம்


இப்போது அப்படி செய்ய முடியவில்லை. பாழாப்போன அறிவு அதனை தடுக்கிறது




(நடந்ததும்கடந்ததும்தொடரும்)


#நடந்ததும்_கடந்ததும் 

#வாழ்ந்தது_இனிது

#vijayarmstrong


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,