முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராஜூவ் மேனன்: பன்முக கலைஞன்

 ராஜூவ் மேனன் அவர்களை, மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராக, இயக்குநராக நாம் அறிவோம். நான் ஒளிப்பதிவாளனாக வரவேண்டுமென்ற எண்ணத்தை அவருடையபம்பாய்திரைப்படமே ஏற்படுத்தியது. அன்று முதல் இன்றுவரை, அவருடைய படைப்புகளை தொடர்ந்து கவனித்து கற்றுக்கொண்டு வருகிறேன்

அண்மைக் காலங்களாக அவரோடு அறிமுகமும், பழக்கமும் ஏற்பட்ட பின்பு, அவரிடம் ஒளிந்து கிடக்கும் பல்வேறு திறமைகளை, ஆளுமையை நெருக்கத்தில் பார்த்து பிரமித்துப்போகிறேன். இத்தனை உயரமும், இத்தனை படைப்பாற்றலும் சும்மா வரவில்லை என்பதும், அதன் பின்னேயிருக்கும் அவருடைய ஈடுபாடும், உழைப்பும் அவர் மீதான மதிப்பையும், பிரமிப்பையும், நேசத்தையும் கூட்டிக்கொண்டே போகிறது.


ஒளிப்பதிவு, சினிமா குறித்து மட்டுமல்ல…  வரலாறு, மேலாண்மை, தொழில்நுட்பம், வணிகம், அரசியல் என எத்துறைப் பற்றியும் அவரோடு உரையாடலாம், அதில் ஆழ்ந்த புலமையும் பார்வையும் கொண்டவர்


கடந்த வாரம், பெரியாரைப்பற்றி ஒரு கட்டுரையை எனக்கு பகிர்ந்திருந்தார். அதன் பிறகான எங்களுடைய உரையாடலில், பல்வேறு தகவல்களை பரிமாறிக்கொண்டார். தமிழக அரசியல் களத்தில், அதன் வரலாற்று சுவடுகளில் அவர் இத்த்னை புலமை பெற்றிருப்பார் என்று சத்தியமாக நான் நினைத்திருக்கவில்லை


கடந்த ஆண்டு, ஒருமுறை அவருடைய அலுவலகம் சென்றிருந்த போது, பாடல் ஒன்றைப்பாடிக்காட்டினார். ஆஹாகுரலும் பாவமும் அத்தனை சுகம். “ஏன் சார் நீங்க பாடுவதில்லை? சினிமாவில் பாடுங்களேன்என்று கேட்டேன். சிரித்துக்கொண்டார்


சில மாதங்களுக்கு முன்பு, அவர் இசை அமைத்து, பாடிகடவுளும் நானும்என்ற பாடலை வெளியிட்டார். மதன் கார்க்கி எழுதிய அப்பாடல், என் மனதுக்கும், சிந்தனைப்போக்கிற்கும் நெருக்கமானது. இப்போது இப்பாடலை, வைரமுத்து எழுத, அவர் இசையமைப்பில் வந்திருக்கிறது. இரண்டு பாடலையும் கேளுங்கள், பாருங்கள், இசையில் அவருடைய ஆளுமை புரியும்


Love You sir 😍😍😍🙏🙏🙏


Naalai Oru Poo Malarum | Naatpadu Theral





Kadavulum Naanum Song | Rajiv Menon | Madhan Karky |





#RajivMenon

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,