முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்தது இனிது…! (06)

 


அவர்களுக்கு நாம் என்னவெல்லாம் செய்தோம் என்பதை அவர்கள் ஒருபோதும் அறிவதில்லைஅல்லது நினைவில் கொள்வதில்லை’ 


பிறந்ததிலிருந்து எத்தனை மனிதர்களை சந்தித்திருப்போம், எத்தனை மனிதர்களை கடந்து வந்திருப்போம். அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என்ற இரத்த உறவுகளுக்கு அப்பால், மருத்துவமனையில் மருத்துவம் பார்த்த மருத்துவர், ஆயாம்மா, நர்ஸ் என துவங்கிபல்வேறு உயிர்களை, மனங்களை கடந்து வந்திருக்கிறோம்


பிற்காலங்களில் அக்கம் பக்கத்து வீடுகளில், தெருவில், பள்ளிக்கூடத்தில், பயணங்களில், திரையரங்களில், கல்லூரியில், பணியிடத்தில் என தொடரும் நட்புறவுகளில்மனதை தொட்டுச்சென்றவர்கள் சிலர், மனதில் தங்கிச்சென்றவர்கள் சிலர், மனதை கடந்து சென்றவர்கள் சிலர்இல்லையா


ஒருகாலத்தில் நெருக்கமாக இருந்த உறவு, நட்பு பிறகு இல்லாமல் போகிறது. கறைந்து காணாமல் போகும் மேகத்தைப்போல


உறவுகளை தள்ளி வைப்போம். அது பல்வேறு உளவியல், வாழ்வியல் சிக்கல்களோடும், அந்தரங்க காரணங்களோடும் சம்பந்தப்பட்டது. நட்பைதான் நாம் இங்கே பொதுவெளியில் சிந்தித்துப்பார்க்க முடியும்


நட்பு எனில்… 

நாம் எப்படி நட்பை பெறுகிறோம்? நட்பு எப்படி நம்மை ஆட்கொள்கிறது? அல்லது நட்பு எப்படி நம்மை வந்தடைகிறது


தெருவில், பள்ளியில், கல்லூரியில், பணியிடத்தில் என துவங்கும் நட்புகள்தாம்நீண்ட கால தொடர்ச்சி கொண்டவைகளாக இருக்கிறன. ஒத்த சிந்தனை, ஒத்த வாழ்வியல், ஒத்த செயல்பாடுகள் என பல்வேறு போக்குகள் ஒத்திருப்பதனால், தொடரும் நட்புகள் அவை


அந்த நட்புகளில் சிலஏதோவொரு கணத்தில் உடைந்து போவதும், தொடர்பற்றுபோவதும் நம்மில் பலருக்கும் நிகழ்ந்திருக்கிறது அல்லவா


அது ஏன்


- சிந்தனை, ரசனை, செயலில் உண்டாகும் முரண்பாடு


- அந்நட்பிலிருக்கும் உரிமை எல்லையை யாரோ ஒருவர் மீறுவது


- இருவரில் ஒருவர் அல்லது இருவரும் அந்நட்பில் ஏமாற்றம் அடைவது அல்லது சலிப்படைவது


- தெரிந்தோ, தெரியாமலோ மற்றொருவரின் மனதை புண் படுத்திவிடுவது


- காலச்சுழ்நிலைகளால் உண்டாகும், இடைவெளி, தொடர்பின்பை


இவையெல்லாம் ஒரு நட்பு முறிவதற்கான காரணங்களாகிருப்பின், அந்த நட்பு மீண்டும் துளிர்விடும். ஏதோ ஒரு கணத்தில் அந்த நட்பு மீண்டும் ஒன்று சேரும்


ஒரு சுபநிகழ்ச்சி, ஒரு மரணம், ஒரு சொல், ஒரு பார்வை, ஒரு குறுச்செய்தி, ஒரு தகவல்போதும், காய்ந்து கிடக்கும் நட்பை மீண்டும் துளிர்க்க செய்ய


சில நட்பு முறிதலுக்கு, மேலும் சில காரணங்கள் இருக்கிறன


- பணியிடத்தில், குறிப்பிட்ட அந்த பணிக்காக உண்டாகும் நட்பு, தேவை முடிந்ததும் விலகும்


- தம் தேவைக்காக நட்பு பாராட்டும் நட்புதேவை தீர்ந்த பின் விலகும். அல்லது இனி தேராது என்றவுடன் விலகும்


- சுயநலம் அல்லது உள்நோக்கம் கொண்ட நட்புகாலத்தே மெல்ல நழுவிச் செல்லும்


இவ்வகை நட்புகள்தாம், சிக்கலானவை. நட்புகாலத்திலும் உண்மையாக இருக்காது, பிரிவிலும் உண்மையாக இருக்காது. முகம் பார்த்தால் புன்னகைக்கும், திரும்பினால் தூற்றும்


நீங்கள் வேண்டுமானால் கவனித்துப்பாருங்கள். உங்களைப்பற்றிய அவதூறை இந்த நட்புகளே துவக்கி வைக்கின்றன. இவர்களோடு இருந்த காலங்களில் எதுவெல்லாம் சிறப்பு என்று கொண்டாடினார்களோடு, அதையெல்லாம் நம்முடைய சாபங்கள் என்பார்கள். அதுவே நமக்கான புதைகுழி என்பார்கள். நமக்கு வேண்டாதவர்களையும், நாம் விலக்கியவர்களையும் தேடி தேடிச்சென்று நட்பு பாராட்டுவார்கள். நமக்கு எதிராக ஒரு அணி திரட்ட முயற்சிப்பார்கள். பெரும்பாலும் அதற்கு தாம் தலைமை வகிக்க முயற்சிக்காமல், பிறரை தலைமை ஏற்க தூண்டுவார்கள். அல்லது தேவைப்படும் போது, வெளியிலிருந்து ஆதரவு தர தாம் தயாராக இருப்பதாக உணர்த்துவார்கள். உங்களை முன்நோக்கி நகர விடாமல், பின்னிருந்து இழுக்கும். உங்கள் காலுக்கடியில் குழித்தோண்டும். அல்லது நீங்கள் கட்டியெழுப்பும் கோட்டைக்கு கைத்தராமல், பின்னே கைக்கட்டி நிற்கும்


நட்பில் இதுவொரு சாபம். தேவை முடிகிற வரை உடன் இருப்பது. நம்மை பயன்படுத்திக்கொள்வது. இனி இதன் தேவை ஏற்படாது அல்லது தேவையில்லை என்றான போது விலகுவது மட்டுமல்லாமல், அவதூறை துவங்கியும் வைப்பது, அதனை வலுசேர்க்கவும் முயல்வது


சரி போகட்டும்


இதில் துயரம் என்னவென்றால்


அவர்களுக்கு நாம் என்னவெல்லாம் செய்தோம் என்பதை அவர்கள் ஒருபோதும் அறிவதில்லைஅல்லது நினைவில் கொள்வதில்லைஎன்பதுதான்


அதை அறிந்துக்கொள்ளும் தகுதியோ, மனமோ, பக்குவமோ இல்லாதிருப்பது. அல்லது இதையெல்லாம் தாண்டிய சுயநலச்சிந்தனை. எப்படியோ வேலை முடிந்தால் போதுமென்ற மனப்போக்கு. தாம் நீலவண்ண நரி என வேஷம் பூண்டு அலையும்


ஆம் அது அப்படிதான். மனம் கலங்க வேண்டாம். ஒருநாள் பொழியும் மழையில் வேஷம் பூண்ட நரியின் சாயம் வெளுத்துபோகும்


நட்பென்றால் எப்படி இருக்குமென்று கவிஞர் அறிவுமதியின் கவிதை ஒன்று இப்படி சொல்கிறது


நீ என்னிடம்

பேசியதை விட

எனக்காகப்

பேசியதில்தான்

உணர்ந்தேன்

நமக்கான

நட்பை ....’ 


#நடந்ததும்_கடந்ததும் 

#வாழ்ந்தது_இனிது

#vijayarmstrong

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,