முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படைப்பாளியும் சமூகமும்:




ஒவ்வொரு தடவையும் இது நிகழ்கிறது. ‘யாரேனும்ஒரு படைப்பாளி மறைந்து போகும் போதெல்லாம் இந்த பேச்சி வெளிவருகிறது


படைப்பாளியை, கலைஞனை சமூகம் கொண்டாட வேண்டும். அவனை, அவன் படைப்பின் மூலமாக மட்டுமே அடையாளம் காண வேண்டும். அவனுடைய வாழ்வு, முழுக்க முழுக்க அவனுடைய தனிப்பட்ட விஷயம், அதிலிருக்கும் கீழ்மைகளை, குறைகளை, வாசகன் அல்லது ரசிகனுக்கு அநாவசியமானது, கண்டுக்கொள்ள வேண்டியதில்லை


என்பதாக, பேச்சுகள், விவாதங்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது


யாரேனும்ஒரு படைப்பாளி, என்று நான் குறிப்பிடுவதில் இருக்கும்யாரேனும்என்ற பதத்தை நான் கவனத்தோடுதான் எழுதுகிறேன். காரணம், பிரபலமான படைப்பாளிகள் மரணிக்கின்ற பொழுது இத்தகைய பேச்சுகள் எழுவதில்லை. பிரபலம் அல்லாத, மரணிக்கின்ற வரையில் பெரும்பாலான வாசகனை, ரசிகனை சென்றடையாத படைப்பாளி, கலைஞன் மறைவின் போதுதான் இந்தப் பிரச்சனை எழுகிறது


யார் அவர்? என்று கேட்டும் அளவிற்கே, அவர்களுடைய படைப்பும், எழுத்தும் வாசகனை, ரசிகனை சென்றடைந்திருக்கிறது. அதற்கு யார் காரணம்


வாசகனா?… படைப்பாளியா

ரசிகனா?… கலைஞனா


என்னைக்கேட்டால்படைபாளியே, கலைஞனே காரணம் என்பேன்


தனக்குறிய வாசகனை, ரசிகனை சென்றடைவது, படைப்பாளியின் கடமைதான். இன்னும் கொஞ்சம் மாற்றி சொல்ல வேண்டுமானால், அது படைப்பின் கடமை


ஆம்படைப்பின் கடமை அது


அதெப்படி? என்றால்தகுதியான படைப்பு, அதற்குறிய இடத்தை ஒருநாள் அடைந்தே தீரும்.. அதுவே வரலாற்றில் பதிந்திருக்கிறது. பல்வேறு உதாரணங்களை நாம் பார்க்க முடியும். காலம் வேண்டுமானால் வேறுபடலாம். ஆனால் ஒருநாள் அது மேடையேறும். கொண்டாடப்படும்


படைப்பையும், படைத்தவனையும் பிரித்து பார்க்க கூடாது. இரண்டையும் ஒப்பு நோக்குவதில்தான், அப்படைப்பின் மீதான மதிப்பீட்டை, படைப்பாளியின் மீதானா மதிப்பீட்டை வைக்க வேண்டும். படைப்பு வேறு, படைப்பாளி வேறு என்று பேசுவது, அயோக்கியத்தனம்


தகுதியானவனிடமிருந்தே, தகுதியான சொல் வரும். வரவேண்டும். தகுதியானவர்களிடமிருந்து சில சமயம், தகுதியற்ற சொல், செயல் வெளிப்படலாம்பட்டிருக்கிறது. என்றாலும் அது அவருடைய, ‘அப்போதையநிலைமையின் அழுத்தம், வெளிப்பாடாக இருப்பின், அதனை விதிவிலக்காக கொள்ளலாம். ஆனால், அதுவே அவருடைய வாழ்வாக, வழக்கமாக இருந்தால்.. அவர் மீதான மதிப்பீட்டிற்கு அளவுகோலாக கொள்ளப்பட வேண்டும்


சொல்லும், செயலும் ஒத்துப்போக வேண்டும். சொல் ஒன்று, செயல் ஒன்று இருப்பவனை மதிக்க முடியாது. ஏற்றுக்கொள்ள முடியாது


குறிப்பாகதனிப்பட்ட வாழ்வில், தன் உடல் பேணாது, உறவு பேணாது, நட்பு பேணாது போன ஒருத்தன், சமூகத்தை பேணுவான் என்பதை நம்ப முடியாதுஏற்க முடியாது


உடலுக்கும், உறவுக்கும், பொருளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றுதெரிந்தேஅதில் வீழ்பவனை, கொண்டாட சொல்லக்கூடாது. கொண்டாடவும் முடியாது. ஏனெனில், அவன் படைப்பு சமூகத்திற்கு வழிகாட்டுமெனில், அவன் வாழ்வு ஒரு தவறான முன்மாதிரியாக மாறிவிடக்கூடிய அபாயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன் பொருட்டே, படைப்பும், படைப்பாளியும் ஒத்திசைந்திருக்க வேண்டுமென்கிறோம்


ஒருவருடைய உயர்வுக்கும், தாழ்வுக்கும் அவனே பொறுப்பாகிறான். சமூகம் அல்ல..! 


ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக் கறிந்து.’ - திருக்குறள்


(ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்)


  • விஜய் ஆம்ஸ்ட்ராங்

கருத்துகள்

  1. ஆறு கடலை டைவதைப் போல படைப்பாளியின் படைப்பு வாசகனை சென்றடைய வேண்டும் என்கிற கருத்தைப் பெற்றுக் கொண்டேன். நன்றி ஜி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,