முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒளிக்கு மனம் உண்டு…!

 



புகைப்படம்கானொளி ஆகிய இரு காட்சிமொழி ஊடகங்களும்ஒளியைகொண்டே இயங்குகின்றன


ஓவியருக்கு வண்ணங்கள்கவிஞருக்கு வார்த்தைகள் எப்படியோ… அப்படித்தான்ஒரு புகைப்படக்காரனுக்கும்ஒளிப்பதிவாளனுக்கும் ‘ஒளி’ அவசியமாகிறது


வண்ணத்தைவார்த்தையை முறையாகநேர்த்தியாக கையாளத்தெரிந்திருக்க வேண்டியது எத்தனைஅவசியமோ… அத்தனை அவசியம் ‘ஒளியை’ கையாளத்தெரிந்து வைத்திருப்பதும்


ஒளிக்கு நிறம் உண்டு… நாம் அறிவோம்


ஒளிக்கு மனமும் உண்டு… அறிந்ததுண்டா?


ஆம்… ஒளிக்கு மனம் உண்டு


ஒளியின் தன்மைஅதன் அடர்த்திஅதன் அளவுஅதன் வண்ணம் கொண்டு… உங்கள் மனநிலையை மாற்றிஅமைக்கும் வல்லமை ஒளிக்கு உண்டு


இசை எப்படி உங்கள் மனநிலையை பாதிக்கின்றதோஅதுபோலவே ஒளியும் பாதிக்கும்


எளிய உதாரணங்கள் பார்க்கலாம்


நண்பகல் வெய்யல்உச்சந்தலைக்கு மேலே சூரியன்… 


மாலை அந்தி சாயும் நேரம்சூரியன் மறைவதற்கு காத்திருக்கிறான்


இதில்… நீங்கள்எந்த நேரத்தை நடை பயணத்திற்கு தேர்ந்தெடுப்பீர்கள்

மாலை நேரத்தைதானே…!


அமைதியாக இசை கேட்க… எந்த நேரத்தை தேர்தெடுக்கிறோம்

இரவைத்தானே!


கடல் அலையை தொட்டு மகிழ எந்த நேரத்தை தேர்ந்தெடுக்கிறோம்

மாலை நேரத்தை தானே!


இதுவெல்லாம்… ஒளியை மையப்படுத்திதான் என்பது நாம் அறிந்ததுதான் இல்லையா


ஒவ்வொரு மனநிலைக்கும் ஏற்ற ஒளி அவசியமாகிறது அல்லவா… 


அதேதான்…!


ஒளி நம்மை பாதிக்கிறது


மனதைத் தொடத்தெரிந்த ஒன்றுமனதை ஊடுருவத்தெரிந்த ஒன்றுமனதோடு இணைப்பைஏற்படுத்திக்கொள்ளத்தெரிந்த ஒன்று….எனில் ஒளிக்கு மனம் உண்டு என்பது சரிதானே..!? 


ஒரு காட்சியை… காட்சிமொழியாக்குவது ஒளிதான்அதனை முறையாக கையாண்டால் மட்டுமே சாத்தியப்படும்நுட்பம் அது


ஒரு சிறந்த படத்திற்கும்சுமாரானப்படத்திற்கு பெரும்பாலும் ஒளியே காரணமாக இருக்கும்


உண்மையில் ஒளி ஒரு மொழியும் கூடஒளியைப் பயன்படுத்தி உங்களோடு உரையாட முடியும்


அதற்கு எளிய உதாரணம்….டிராஃபிக் சிக்னல்ஆம்புலன்ஸ்


அதனால்தான் சொல்கிறேன்


ஒளிக்கு வண்ணம் உண்டு

ஒளிக்கு மனம் உண்டு

ஒளிக்கு மொழியும் உண்டு


வாருங்கள்… அந்த மொழியை முறையாக நேர்த்தியாக கையாள கற்றுக்கொள்வோம்


Coming Sat & Sunday. Register Today 


Cinematic Lighting Workshop - Two Days 

For Photographers & Videographers

Dec 04 & 05th 2021

Saturday & Sunday -  Pathayam Inn - Thiruvanamalai 


#tamilcinema #photography #photoshoot #photo #photographyworkshop #photographer #photographylovers #shortfilms #shortfilmshoot #shortfilmcompetition #shortfilmcompetition #tamil #tamilcinema #learnphotography #learncinematography #learncinema #learnlighting #workshop #images #viscom #studentlife 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,