முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படமும்…! (5)



தைப்பூசத் திருவிழாவில் பெரிய கேமராவை வைத்துக்கொண்டு சுற்றி சுற்றி வந்து படமெடுத்தமுத்துமாமா. நட்ராஜ் ஜாமெண்டரி பாக்ஸ் அளவில் மிகச்சிறிய கேமராவை வைத்து படமெடுத்தமுருகன்மாமா. பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், தூக்க முடியா பாரத்தில் இருக்கும் கேமராவை, ஆளுயர ஸ்டேண்டில் நிறுத்தி, கருப்புத்துணி போர்த்தி படமெடுத்த அந்த அண்ணா, என்று கேமராவை முதன் முதலில் என கண்ணில் காட்டியவர்கள் இவர்கள்தாம்


பிற்காலத்தில் முத்து மாமா பயன்படுத்தியது ‘TWIN Lens Camera’ என்றும் முருகன் மாமா பயன்படுத்தியது ‘Pocket Cameras’ வகையைச் சார்ந்தது என்றும் பள்ளியில் படமெடுத்தது ‘Large Format’ கேமரா என்றும் தெரிந்துக்கொண்டேன்


Twin Lens கேமராக்களில், பார்ப்பதற்கு ஒரு லென்ஸும், படமெடுப்பதற்கு மற்றொரு லென்ஸும் பயன்படுகின்றன. மேலும் கீழுமாக இருக்கும் இரண்டு லென்ஸுகளுக்கும் இடையே சிறிய இடைவெளி இருப்பதனால், ஒரு காட்சியை சட்டகத்திற்குள் (Frame) கொண்டு வரும்போது, கவனமாக செயல்பட வேண்டும், அதனை சரி செய்யவே SLR (Single Lens Reflector) வகைக் கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ‘Pocket’ கேமராக்களில் கேசட் வடிவில் இருக்கும் படச்சுருளைப் பயன்படுத்தி படமெடுக்கலாம் என்பதும், ‘Large Format’ கேமராக்களில் நாம் வழக்கமாக பயன்படுத்தும் 35MM படச்சுருளை விட பெரிய படச்சுருள்கள் (120 film format - roughly 61 mm) பயன்படுத்துகின்றன என்பதை அறிந்துக்கொள்ள வெகுகாலம் தேவைப்பட்டது


சிறுவயதில், புகைப்படத்துறையின் மீது காதல் வருவதற்கு இந்த மூவர்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். பிறகு எங்கள் வீட்டில் ஒரு பாக்கெட் கேமராவை அப்பா வாங்கினார். வெகுகாலம் அதனை அவர் மட்டுமே பயன்படுத்தினார். குடும்பமாக சுற்றுல செல்லும்போதெல்லாம் அதனை பயன்படுத்தினோம். பிறகு அதில் ஏதோ பழுது ஏற்பட்டு தீண்டுவார் இல்லாமல் வீட்டு அலமாரியில் கிடந்தது. அதனை ஒரு நாள் தேடி எடுத்து, முருகன் மாமாவிடம்(அத்தைப் பையன்) கொடுத்து சரி செய்து வாங்கினேன். அதற்கு தேவையான படச்சுருள்(Film) எப்படி எனக்கு கிடைத்தது என்பதை இங்கே விவரித்தால், அது ஒரு பெரிய கதையாக மாறும், அதை பிறகு சொல்கிறேன். இப்போதைக்கு அக்கேமராவைப் பயன்படுத்தி படமெடுத்தது பார்த்தேன் என்பதும், அதில் பத்து படம் கூட தேறவில்லை என்பதனைக் கண்டு, புகைப்படமெடுப்பதில் பெரிய ஆர்வம் கொள்ளாமல் விட்டு விட்டேன் என்பதையும் மட்டும் தெரிந்துக்கொள்வோம். இதுவெல்லாம் நான் எட்டாவது, ஒம்பதாவது படித்தக்காலத்திற்கு முன்பாகவே நிகழ்ந்து விட்டவை.


பிறகு திரைப்பட ஒளிப்பதிவின் மீது ஆர்வம் ஏற்பட்ட, பெங்களூரில் கேமரா பழுது பார்க்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் வரை, வேறெந்த கேமராவையும் தொட்டுப்பார்த்ததில்லை


“If you want something in life, the whole Universe conspires for you to get it,” - Paulo Coelho


"வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை நீங்கள் விரும்பினால், அதை நீங்கள் பெற முழு பிரபஞ்சமும் உதவி(சதி) செய்கிறது," - என்கிறார் பாலோ கோயல்ஹோ


ஆம், அது உண்மைதான்.


பிற்காலத்தில், நான் தொட்டுப்பார்க்காத கேமராக்களே இல்லை எனலாம். பெங்களூர் கேமரா நிறுவனத்திற்கு, அனைத்து வகை கேமராக்களும் வந்ததன. அதை எல்லாவற்றையும் நான் பயன்படுத்திப் பார்த்தேன். பல மாடல் கேமராக்கள், நூற்றுக்கணக்கான படச்சுருள்கள் என்று புகைப்படங்கள் எடுக்க முடிந்தது என் அதிஷ்டம் எனலாம், அல்லது பிரபஞ்சம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புகள் எனலாம்


ஒன்றை நாம் ஆழமாக நேசித்து, நேர்மையோடு தேடும் போது, அது நம்மை நோக்கி நெருங்கி வரும் அல்லது அதற்கான பாதையில் வாழ்வு நம்மை வழி நடத்தும்


இது நான், என் வாழ்வில் கண்டெடுத்த பாடம் அல்லது உண்மை


(தொடரும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,