முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படமும்…! (7)


வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டது ஜூலை 30, 2000 ஆண்டு. 108 நாட்கள் கழித்து நவம்பர் 15 அன்று ராஜுகுமார் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். இந்த இடைப்பட்ட காலங்களில் பெங்களூர் நகரம் முக்கிய செய்திகளில் இடம்பிடித்தது. ஒருபுறம் தமிழக-கர்நாடக அரசுகள் வீரப்பனோடு பேரம் பேசியன. மறுபுறம் வீரப்பன் தமிழர்களின் அடையாளமாக பார்க்கப்பட்டு, தமிழர் கன்னடர் விரோத போக்குகள் அதிகரித்தன. இந்நிலையில், ராஜ்குமாரோடு சேர்த்து கடத்தப்பட்ட மூவரில் ஒருவரானநாகப்பா’, செப் 28ஆம் தேதி, வீரப்பனின் பிடியில் இருந்து தப்பித்து வந்துவிட்டார் என்று சொல்லப்பட்டது. மீடியாக்கள் பரபரப்பாயின. அதுவரை காட்டில் என்ன நடக்கிறது என்பதை, நக்கீரன் கோபால், பழநெடுமாறன் அவர்களின் தலைமையில் சென்றிருந்த தூதுகுழு கொண்டு வரும் தகவல்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியதாக இருந்தது. இப்போது நேரடியாக சம்பந்தப்பட்டவர் வெளியேறி வந்திருக்கிறார், அவர் மூலம் வேறெதேனும் உண்மைகள் வெளிவரக்கூடும் என்று எல்லாப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் போட்டிப்போட்டு நாகப்பாவைப் பிடித்துவிட முயன்றார்கள்.


நாங்கள் கூட, நாகப்பா வசித்த வீட்டுப்பகுதியில் இரவு முழுவதும் காத்திருந்தோம். ஒருவேளை நாகப்பா அங்கே வந்தாலும் வரலாம் என்று. என்னுடன்சகாய்என்ற பெங்களூர் தமிழ் நண்பர் வந்திருந்தார். அவருக்கு கன்னடமும் தெரியும் என்பதனால் உதவியாக இருந்தது. அந்த இரவு ஒரு பரபரப்பான இரவாக, சாகசம் நிறைந்த இரவாக மாறப்போவதாக நினைத்துக்கொண்டேன். அதுவரை படித்திருந்த பத்திரிக்கையாளர்களின் கதை, திரைப்பட நாயகர்களின் சாகசங்கள் எல்லாம் கண் முன்னே வந்துப்போனது. விடியும் வரை தூங்காமல் காத்திருந்தோம். ஒன்றும் நடக்கவில்லை. சக பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என்று பலர் கடந்து சென்றது மட்டுமே மிச்சம். ஒரு டீ குடிக்க கூட வழி இல்லை அந்த இரவில். மறுநாள் அரசுதான் பத்திரிக்கையாளர்களுக்கு நாகப்பாவை அறிமுகப்படுத்தி  வைத்தது


பிறகு ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட போது, மீண்டும் பெங்களூர் நகரம் பரபரப்பானது. சென்னையிலிருந்து ஆனந்தவிகடனின் முதன்மை புகைப்படங்காரர்களானகுமரேசன்’, ‘விவேக்போன்றோரும் மூத்த பத்திரிக்கையாளர்பாலகிருஷணன்அவர்களும் பெங்களூர் வந்தனர். ராஜ்குமார் அவர்களின் வீட்டுக்குச் சென்றோம். விடுவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக மக்களைச் சந்திக்கும் நிகழ்வு அது. பெரும் கூட்டம் கூடி இருந்தது. நான் அதுவரை ராஜ்குமார் அவர்களை நேரடியாக பார்த்தது இல்லை. அங்கே கூடியிருந்த மக்களின் கோஷங்களும், அவர் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பையும் பார்க்க பார்க்க எனக்கும் அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது. காத்திருக்கத்துவங்கினோம்.


சில மணி நேர காத்திருப்புக்கு பின்பு, ராஜ்குமார் அவர்களின் வீட்டு மேல் மாடி சன்னல் திறந்தது. அதன் வழியாக ராஜ்குமாருடைய முகம் மெல்ல தெரியத்துவங்கியது. கூட்டம் அந்த முகத்தைப்பாத்து பெருத்த கோஷம் போடத்துங்கியது. பலர் ஆனந்த கண்ணீர் வடித்தார்கள். நான்ஜூம் லென்ஸ்கொண்ட ஒரு கேமராவின் வழி அவரைப் பார்த்தேன். அந்த முகம்அந்த முகம்இன்றும் என்னால் மறக்க முடியா முகம் அது. ஜும் லென்ஸ் உதவியோடு நெருக்கத்தில் பார்த்த அம்முகத்தில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது. ஒரு பிரபலத்தின் முகம் ஏன் அத்தனை பேரை வசிகரிக்கிறது என்பதற்கான காரணத்தை அன்று உணர்ந்தேன். அம்முகத்தில்வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத ஒரு வசிகரமும், கவர்ச்சியும் இருந்தது. கூடவே வயதின் காரணமாக ஏற்பட்ட முதிர்ச்சியும், பக்குவமும், ஒருவித தேஜஸும், முகம் முழுவதும் நிரம்பி வழிந்ததைக் கண்டேன். அந்த நொடியில் நானும் அவருடைய ரசிகனாய் மாறிப்போனேன். அதுநாள் வரை நான் அவருடைய எந்தத் திரைப்படத்தையும் பார்த்ததில்லை, என்றாலும் அந்த முகம் என்னைக் கட்டிப்போட்டது. கூடியிருந்தோரின் பெரும் கோஷம், பரவச குரல்கள், கூடவே அழுகுரல்களும் அச்சூழலை ஒருவித பரவச நிலைக்கு கொண்டு சென்றது. அதுவொரு கணம். வாழ்வில் எப்போதாவது நிகழும் கணம்.


சிறுது நேரம் பொறுத்து, தன்னுடைய ஒரு சிறிய கையசைப்பினால், அப்பெரும் கூட்டத்தின் கூச்சலை அடக்கினார் ராஜ்குமார். அவர் அமைதியாக இருங்கள் என்று கையசைத்தபோது கூட்டம் கட்டுப்பட்டு அமைதியாயிற்று. சில வார்த்தை பேசினார். கூட்டத்திற்கு நன்றி சொன்னார். பிறகு கையசைத்து விட்டு உள்ளே சென்று விட்டார். கூட்டம் அவரை வாழ்த்தி கோஷமிட்டது. பிறகு காவல்துறையின் முயற்சியால் கலைந்து சென்றது. நாங்கள் (விகடன் குழு) அவரை பேட்டி காண அவர் வீட்டிற்குள் சென்றோம். பொதுவான பத்திரிக்கை சந்திப்பிற்கு பிறகு, ஆனந்த விகடனுக்கென்று பிரதியோகமான பேட்டி ஒன்றை அன்று அவர் கொடுத்தார். ராஜ்குமார், அவருடைய மனைவி பர்வதம்மா, மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், புனித் ராஜ்குமார் என்று அனைவரும் உடன் இருந்தனர் என்று நினைவு. என்னுடைய சீனியர் புகைப்படங்காரர்கள் இருந்தபோதும், நானும் சில புகைப்படங்களை அன்று எடுத்தேன். அவை ஜூனியர் விகடனின் பிரசுரமாயிற்று


ராஜ்குமாரின் கடத்தல் சம்பவத்தில், பெங்களூர் சார்ந்த சம்பவங்களில், நான் எடுத்த சில, பல புகைப்படங்கள் அப்போதைய ஆனந்தவிகடன், ஜூனியர் விகடனில் பிரசுரமானது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. பத்திரிக்கையாளனாக ஏதோ செய்துவிட்டதாக தோன்றியது


கூடவே பல்வேறு பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்களைச் சார்ந்த நண்பர்களை அப்போது பெற்றேன். அதில் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையைச் சார்ந்த பெண் புகைப்படக்காரரைக்குறித்து ஒரு சம்பவம் இருக்கிறது. நான்பல்ப்வாங்கிய சம்பவம் அது… 


(தொடரும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...