முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

03: சிறு, குறு முதலீட்டுத் திரைப்படங்கள்:



 பொதுவாக ஒரு சிறிய முதலீட்டுத் திரைப்படம் எடுக்க, 1.5 கோடியிலிருந்து 2 கோடி வரை ஆகும் என்பதையும், அப்பணம் எப்படியெல்லாம் செலவாகிறது, எதற்கெல்லாம் தேவைப்படுகிறது என்பதைப்பற்றியும் முந்தைய இரண்டு பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். (ஆர்வம் கொண்டவர்கள் அதனை படித்துவிட்டு, மேலே தொடருங்கள்)


கோடிகள் எதற்கு... சில லட்சங்களே போதும்(குறு முதலீடு), ஒரு திரைப்படத்தை எடுத்துவிட முடியும் என்று நம்புகிறவர்களை, சொல்பவர்களையும் நான் அறிவேன். அதுசரிதானா? அப்படி லட்சங்களில்மட்டும்செலவு செய்து ஒரு திரைப்படத்தை எடுத்துவிட முடியுமா? என்று என்னைக்கேட்டால்...


முடியும் என்பதுதான் என் பதில்ஆனால்


தரமான திரைப்படமாக எடுத்துவிட முடியுமா? என்பதுதான் இங்கே தொங்கி நிற்கும் கேள்வி. அதற்குதான் பதில் தேட வேண்டியதாகிறது.


குறைந்த செலவில் (சில லட்சங்கள்) ஒரு தரமான திரைப்படம் எடுக்க பல்வேறு காரணிகள் இருக்கிறன


முதலில், தரமான திரைப்படம் என்றால் என்ன? என்பதை நாம் விள(ங்)க்கிக் கொள்ள வேண்டும். இங்கேதான் பெரும்பாலும் சிக்கல் ஏற்படுகிறது. காரணம், தரமான திரைப்படம் என்பதை இங்கே பலரும், பலவிதமாக புரிந்து வைத்திருக்கிறார்கள். ஜனரஞ்சகமான பொழுதுபோக்குத் திரைப்படங்கள், கலைப்படங்கள், மக்கள் பிரச்சனையை பேசும் திரைப்படம், வாழ்வியலைப் பேசும் திரைப்படங்கள், உணர்வுகளை, உணர்ச்சியை கடத்தும் படங்கள் என்று பல்வேறு வரையறைகளை நாம் வைத்திருக்கிறோம். இதில் தரமான திரைப்படம் என்றால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று நினைவுக்கு வரும்


எந்தப்படமாக வேண்டுமானாலும் இருக்கலாம், எல்லாவற்றிற்கு ஒரே ஒரு பொது விதி ஒன்று இருக்கிறது. அதுபார்வையாளனோடு உரையாடுவது


அதாவது, நீங்கள் சொல்லும் கதை பார்வையாளனுக்கு செய்தியாக, தகவலாக போய் சேரக்கூடாது. உணர்வுப்பூர்வமாக அவனை அது தாக்க வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் பார்வையாளன்எதிர்வினைஆற்ற வேண்டும். சிரிப்போ, துக்கமோ, அழுகையோ, ஆச்சரியமோ, அதிர்ச்சியோ, ஆர்வமோ, இணக்கமோ வெளிப்படுத்த வேண்டும். திரையில் ஊடாடும் கதாப்பாத்திரங்களை அவன் அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும். அவனாகவோ, பக்கத்துவீட்டுக்காரனாகவோ, நண்பனாகவோ, எங்கோ செய்தியில் படித்தவனாகவோஇருக்கலாம். அப்படி ஒரு கதாப்பாத்திரத்தை உண்மை என்று நம்பவேண்டும். அப்போது பார்வையாளனுக்கும், திரையில் உயிர்த்தெழும் கதாப்பத்திரத்திற்கு இடையே ஒரு இழை உண்டாகும். அந்த இழை, கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பட்டு, இரண்டு பேரையையும் கடைசிவரை பிணைத்து வைக்க உதவும். அப்படி பிணைக்கப்பட்ட பார்வையாளன், திரைப்படத்தோடும், கதாப்பாத்திரங்களோடு உரையாட துவங்கிவிடுவான். இது நிகழ்ந்தே ஆகவேண்டும்


எனில், ஒரு தரமான திரைப்படம் என்பது, ‘பார்வையாளனோடு உரையாடும் படம்என்று புரிந்துக்கொள்வோமா? அப்படி ஒரு திரைப்படம் உரையாடுவதற்கு, பல்வேறு காரணிகள் காரணமாக இருக்குமென்றேன் இல்லையா?


அது என்னென்ன


  1. கதை
  2. திரைக்கதை
  3. கதாப்பாத்திரங்கள்
  4. வசனம்
  5. நடிகர்கள்
  6. நடிப்பு
  7. இயக்கம்
  8. ஒளிப்பதிவு
  9. கலை இயக்கம்
  10. படத்தொகுப்பு
  11. இசை


என்று பல்வேறு துறை சம்பந்தப்பட்டிருப்பதனால், இத்துறைச்சார்ந்த திறமையும், அனுபவமும் கொண்ட கலைஞர்களின் கூட்டு முயற்சியாகத்தான் ஒரு தரமான திரைப்படம் இருக்க முடியும் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருக்கிறதா? இருக்காது என்று நம்புகிறேன். எனில், அத்தகைய கலைஞர்களின் துணையில்லாமல், அனுபவம் இல்லாமல் ஒரு குறு முதலீட்டுப்படத்தை எடுத்து விட முடியும் என்று நம்புவது எத்தகைய மூடத்தனம்..!? 


என் அனுபவத்தில் இப்படி குறு முதலீட்டில் திரைப்படம் எடுக்க முயற்சிப்பவர்கள், பெறும்பாலும் அனுபவம் அற்றவர்களாக, தகுதியான கலைஞர்களின் துணையில்லாமலும் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். தம்மிடம் போதுமான அளவு பணம் இல்லாததனால், குறு முதலீட்டுத் திரைப்படங்களை எடுக்க முயல்கிறார்களேத் தவீர வேற நோக்கம் இல்லை. அதனால் தான் அத்தகையப் படங்கள் தோல்வியில் முடிகிறது


உண்மையில் நீங்கள் ஓர் குறு முதலீட்டுத் திரைப்படத்தை எடுக்க விரும்புகிறீர்கள் என்றால், உங்களுக்கு முதலில் தேவைப்படுவதுஒரு கதை அல்லது ஒரு கதாப்பாத்திரம்கூடவே திறமையும் அனுபவமும் வாய்ந்த கலைஞர்கள், தொழில்நுட்பாளர்கள்.


சரிமுதலில் கதையைப்பற்றிப் பேசுவோம்


பொதுவாக ஹீரோயிஸப்படங்கள், காதல் படங்கள், வாழ்க்கை வரலாறு படங்களைத்தாண்டி, சிறந்த திரைக்கதைகளை இப்படி வகைப்படுத்தலாம் என்கிறார்கள்


A. ‘சராசரி மனிதர்கள்அசாதரமான சூழலில் சிக்கிக்கொள்வது’ - அதாவது நம்மைப்போன்ற ஒரு சராசரி கதாப்பாத்திரம், சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரச்சனையில் சிக்கிக் கொள்வது. ‘ரோஜாதிரைப்படத்தில்காதல் ஜோடிகாஷ்மீர் போராளிகளிடம் மாட்டிக்கொள்வது, கணவனை மீட்க போராடும் ஒரு எளிய காதல் மனைவி’. இதில் காதல் ஜோடியே பிரதானம். அவர்கள் சந்திக்கும் பிரச்சனை, சம்பவங்கள் இரண்டாவதாக இருக்கிறது.


B. ‘ஒரு அசாதரன சம்பவம்அதை கையாளும் கதாப்பாத்திரங்கள்’ - அதாவது, விபத்து, கொலை, கொள்ளை, பெரும் ஆபத்து போன்ற ஒரு சம்பவத்தை தீர்த்து வைக்கும் அல்லது கையாளும் கதாப்பாத்திரம்’. அறம் திரைப்படத்தில்குழிக்குள் விழுந்துவிடும் குழந்தைஅதனை மீட்டெடுக்கும் ஆட்சியர்’. இதில் பிரச்சனை, சம்பவமே பிரதானம். அதனை கையாளும் கதாப்பாத்திரங்கள் இரண்டாவதாக வருகிறார்கள்


யோசித்துப்பார்த்தல், எந்தவொரு தரமான திரைப்படத்தையும், இப்படி இரண்டு வகைமையில் பிரித்துவிட முடியும்.


உதாரணத்திற்கு சிலப்படங்கள்.


A. ஜெய்பீம், மகாநதி, அன்பே சிவம், பம்பாய், ஹேராம், பொல்லாதவன்

B. போர்த்தொழில், அயோத்தி, கத்தி


எங்கேநீங்கள் சிலப்படங்களைச் சொல்லுங்கள் பார்க்கலாம். படத்தின் பெயர், அது எந்த வகைமையில் வருகிறது என்பதையும் சொல்ல வேண்டும். அல்லது A,B என்று குறிப்பிடுங்கள்.


  • விஜய் ஆம்ஸ்ட்ராங்


#Cinema  #tamilcinema  #movies  #MovieMaking  #filmmaking  #expenses #filmexperience #vijayarmstrong 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன