முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

04: சித்திரமும் கைப்பழக்கம் : சிறு, குறு முதலீட்டுத் திரைப்படங்கள்

 


சிறு, குறு முதலீட்டுத் திரைப்படங்கள் எடுக்க முதலில் தரமான கதை வேண்டுமென்றேன். காரணம், பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களில், ஒரு பார்வையாளனை ஈர்க்க அல்லது உற்சாகம் கொள்ள வைக்க, பல்வேறு விஷயங்கள் இருக்கிறன

உச்ச நட்சத்திர நடிகர், நடிகைகள் (Top Actors), பிரம்பாண்டமான அரங்குகள்(Sets), வெளிநாட்டு படபிடிப்பு (Foreign Locations), அசத்தலான பாடல்கள் (Top MUsic Directors, Best Songs), நடனங்கள் (Top Dance Masters), மிரட்டலான சண்டைக்காட்சிகள் (Top Fight Masters, Equipments) என்று பெரும் செலவு செய்து, கொண்டு வந்துவிட முடியும். யோசித்துப்பார்த்தல், நான் சொல்வதில் இருக்கும் உண்மை புரியும். இதில் கதை என்று ஒன்றைகொஞ்சம்வைத்தால் போது, படத்தை காப்பாற்றிவிட முடியும். அதைத்தான் நம்முடையகமர்ஷியல் திரைப்படங்கள்தொடர்ந்து செய்து வருகின்றன. ஆனால், ஒரு குறு முதலீட்டுத் திரைப்படத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பிருக்காது, பார்வையாளனை முழுமையாக இரண்டு, இரண்டரை மணி நேரம் கவர்ந்து வைத்திருக்க வேண்டுமானால், கதை மட்டுமே அதை செய்ய முடியும்.


தமிழில் அப்படி குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்களை கொஞ்சம் கவனித்துப்பார்த்தல் இதை புரிந்துக்கொள்ள முடியும்


காதல், மைனா, பீட்சா, மேற்கு தொடர்ச்சி மலை, ஜோக்கர், அருவி, லவ் டுடே, மாநகரம் என்று சிலப்படங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படங்கள் யாவும், உங்களை கட்டிப்போடும் கதையும், திரைக்கதையையும் கொண்டிருந்தன என்பது புரியும்.


எனில், தரமான கதையையும், திரைக்கதையை எழுத அனுபவமும், திறமையும், வாழ்வியலும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையடையும். மேலே குறிப்பிட்ட இயக்குநர்கள், அதன் திரைக்கதை ஆசிரியர்களைப்பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டாலே அவர்களுடைய திறமையும், ஆற்றலையும் புரிந்துக்கொள்ளலாம்


அதுப்போலவேஒரு கதையை திரைப்படமாக்க, திரைப்படத்துறையில் அனுபவம் வேண்டும். தனித்தனியாக இருக்கும் பூக்களை கோர்த்து, மாலை ஆக்குவது போலகாட்சிகளாக, சுடுவுகளாக(ஷாட்) படம் பிடித்து தொகுத்து, வசனம், ஒலி, இசை சேர்த்துகோர்த்து பார்க்கும் போதுதான் ஒரு திரைப்படம் முழுமையடைகிறது. இந்த பிரித்துப்போட்டு கோர்க்கும் கலையை புரிந்துக்கொள்ள, கைக்கொள்ள அனுபவ அறிவுகண்டிப்பாகவேண்டும்


சித்திரமும் கைப்பழக்கம்என்பார்கள். அதாவது தொடர்ந்து பயிற்சி செய்தால் தான் ஓவியம் வரைய கற்றுக்கொள்ள முடியும். ஓவியத்திற்கே அப்படி என்றால், எழுத்து, இசை, படத்தொகுப்பு, வண்ணம், ஒலி என்று பல்வேறு கலைகளின் தொகுப்பான திரைப்படத்தை எடுக்க எத்தகைய அனுபவமும், பயிற்சியும் வேண்டும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.


நீங்கள் ரசித்த ஒரு குறு முதலீட்டுப்படத்தை இயக்கிய, இயக்குநரின் பின்புலத்தை, அனுபவத்தை தெரிந்துக்கொள்ளுங்கள். அவரால் எப்படி ஒரு தரமான திரைப்படத்தை தர முடிந்தது. அதற்கு பின்னே இருக்கும் உழைப்பை புரிந்துக்கொள்ளுங்கள்


பொத்தம் பொதுவாக, வெற்றிப்பெற்ற இயக்குநர்களின் பேட்டிகளை பார்த்து ஏமார்ந்துப்போகாதீர்கள்


நான் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லைநேரடியாக திரைப்படம் இயக்கிவிட்டேன்என்று பேட்டிக்கொடுக்கும் வெற்றியாளரின், இந்த வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவரை மதிப்பிடாதீர்கள்


உதாரணத்திற்குஇயக்குநர்கார்த்திக் சுப்புராஜைஎடுத்துக்கொண்டால், அவர்பிட்சாஇயக்குவதற்கு முன்பாக குறைந்தது 20 குறும்படங்களையாவது இயக்கியிருப்பார். முறையான திரைப்படக் கல்லூரியில் படித்தவர். அந்த அனுபவங்கள் மூலம் அவர் பெற்ற திறமைதான், அவரை வெற்றியாளராக்கியது. இது எல்லா இயக்குநர்களுக்கும் பொருந்தும்.


இதனால், சொல்ல வருது என்னவென்றால்திரைப்படத்துறையில்முன் அனுபவம்இல்லாமல் ஒரு திரைப்படத்தை இயக்க முயற்சிக்காதீர்கள். குறைந்த பட்சம் பல குறும்படங்களையாவது இயக்குங்கள். அதனை பொதுவெளிக்கு கொண்டுவந்து, உண்மையான அதன் தரத்தை புரிந்துக்கொள்ளுங்கள்


விருப்பு, வெறுப்பு அற்றநேர்மையாக உங்கள் திரைப்படங்களை அணுகுங்கள். குறைந்த பட்சம் உங்களுக்காவது நேர்மையாக இருங்கள். உங்களுக்கு எது தெரிந்திருக்கிறது, எது தெரிந்திருக்கவில்லை என்பதை புரிந்துக்கொண்டு, அதனை வளர்த்துக்கொள்ளுங்கள்


திறமையும், அனுபவமும் மட்டுமே வெற்றிக்கானகுறுக்குவழி. மற்றவை எல்லாம்அதிகசெலவுபிடிப்பவை.


போலவேஉங்களுடையதொழில்நுட்பக்குழுவையும் தேர்ந்தெடுங்கள். அவர்களுடைய அனுபவத்தையும், திறமையை கணக்கில் கொள்ளுங்கள். உங்களோடான  நட்பும், நெருக்கமும் மட்டும் போதாது. பெரும்பாலும் அதுஉங்கள் தோளின் மீது ஏற்றப்பட்ட பாரங்களாகமாறிவிட வாய்ப்புகள் அதிகம்


பொதுவாகவே


வெற்றி என்பது சுலபத்தில் வருவதில்லை என்பதை நாம் அறிவோம்

திரைப்பட வெற்றி என்பதுஅவ்வளவுசுலபத்தில் வருவதில்லை.’


குறு முதலீட்டுத் திரைப்படங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்பம், கருவிகளைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.


(தொடரும்)


#Cinema  #tamilcinema  #movies  #MovieMaking  #filmmaking  #expenses #filmexperience #vijayarmstrong 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...