முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

04: சித்திரமும் கைப்பழக்கம் : சிறு, குறு முதலீட்டுத் திரைப்படங்கள்

 


சிறு, குறு முதலீட்டுத் திரைப்படங்கள் எடுக்க முதலில் தரமான கதை வேண்டுமென்றேன். காரணம், பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களில், ஒரு பார்வையாளனை ஈர்க்க அல்லது உற்சாகம் கொள்ள வைக்க, பல்வேறு விஷயங்கள் இருக்கிறன

உச்ச நட்சத்திர நடிகர், நடிகைகள் (Top Actors), பிரம்பாண்டமான அரங்குகள்(Sets), வெளிநாட்டு படபிடிப்பு (Foreign Locations), அசத்தலான பாடல்கள் (Top MUsic Directors, Best Songs), நடனங்கள் (Top Dance Masters), மிரட்டலான சண்டைக்காட்சிகள் (Top Fight Masters, Equipments) என்று பெரும் செலவு செய்து, கொண்டு வந்துவிட முடியும். யோசித்துப்பார்த்தல், நான் சொல்வதில் இருக்கும் உண்மை புரியும். இதில் கதை என்று ஒன்றைகொஞ்சம்வைத்தால் போது, படத்தை காப்பாற்றிவிட முடியும். அதைத்தான் நம்முடையகமர்ஷியல் திரைப்படங்கள்தொடர்ந்து செய்து வருகின்றன. ஆனால், ஒரு குறு முதலீட்டுத் திரைப்படத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பிருக்காது, பார்வையாளனை முழுமையாக இரண்டு, இரண்டரை மணி நேரம் கவர்ந்து வைத்திருக்க வேண்டுமானால், கதை மட்டுமே அதை செய்ய முடியும்.


தமிழில் அப்படி குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்களை கொஞ்சம் கவனித்துப்பார்த்தல் இதை புரிந்துக்கொள்ள முடியும்


காதல், மைனா, பீட்சா, மேற்கு தொடர்ச்சி மலை, ஜோக்கர், அருவி, லவ் டுடே, மாநகரம் என்று சிலப்படங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படங்கள் யாவும், உங்களை கட்டிப்போடும் கதையும், திரைக்கதையையும் கொண்டிருந்தன என்பது புரியும்.


எனில், தரமான கதையையும், திரைக்கதையை எழுத அனுபவமும், திறமையும், வாழ்வியலும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையடையும். மேலே குறிப்பிட்ட இயக்குநர்கள், அதன் திரைக்கதை ஆசிரியர்களைப்பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டாலே அவர்களுடைய திறமையும், ஆற்றலையும் புரிந்துக்கொள்ளலாம்


அதுப்போலவேஒரு கதையை திரைப்படமாக்க, திரைப்படத்துறையில் அனுபவம் வேண்டும். தனித்தனியாக இருக்கும் பூக்களை கோர்த்து, மாலை ஆக்குவது போலகாட்சிகளாக, சுடுவுகளாக(ஷாட்) படம் பிடித்து தொகுத்து, வசனம், ஒலி, இசை சேர்த்துகோர்த்து பார்க்கும் போதுதான் ஒரு திரைப்படம் முழுமையடைகிறது. இந்த பிரித்துப்போட்டு கோர்க்கும் கலையை புரிந்துக்கொள்ள, கைக்கொள்ள அனுபவ அறிவுகண்டிப்பாகவேண்டும்


சித்திரமும் கைப்பழக்கம்என்பார்கள். அதாவது தொடர்ந்து பயிற்சி செய்தால் தான் ஓவியம் வரைய கற்றுக்கொள்ள முடியும். ஓவியத்திற்கே அப்படி என்றால், எழுத்து, இசை, படத்தொகுப்பு, வண்ணம், ஒலி என்று பல்வேறு கலைகளின் தொகுப்பான திரைப்படத்தை எடுக்க எத்தகைய அனுபவமும், பயிற்சியும் வேண்டும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.


நீங்கள் ரசித்த ஒரு குறு முதலீட்டுப்படத்தை இயக்கிய, இயக்குநரின் பின்புலத்தை, அனுபவத்தை தெரிந்துக்கொள்ளுங்கள். அவரால் எப்படி ஒரு தரமான திரைப்படத்தை தர முடிந்தது. அதற்கு பின்னே இருக்கும் உழைப்பை புரிந்துக்கொள்ளுங்கள்


பொத்தம் பொதுவாக, வெற்றிப்பெற்ற இயக்குநர்களின் பேட்டிகளை பார்த்து ஏமார்ந்துப்போகாதீர்கள்


நான் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லைநேரடியாக திரைப்படம் இயக்கிவிட்டேன்என்று பேட்டிக்கொடுக்கும் வெற்றியாளரின், இந்த வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவரை மதிப்பிடாதீர்கள்


உதாரணத்திற்குஇயக்குநர்கார்த்திக் சுப்புராஜைஎடுத்துக்கொண்டால், அவர்பிட்சாஇயக்குவதற்கு முன்பாக குறைந்தது 20 குறும்படங்களையாவது இயக்கியிருப்பார். முறையான திரைப்படக் கல்லூரியில் படித்தவர். அந்த அனுபவங்கள் மூலம் அவர் பெற்ற திறமைதான், அவரை வெற்றியாளராக்கியது. இது எல்லா இயக்குநர்களுக்கும் பொருந்தும்.


இதனால், சொல்ல வருது என்னவென்றால்திரைப்படத்துறையில்முன் அனுபவம்இல்லாமல் ஒரு திரைப்படத்தை இயக்க முயற்சிக்காதீர்கள். குறைந்த பட்சம் பல குறும்படங்களையாவது இயக்குங்கள். அதனை பொதுவெளிக்கு கொண்டுவந்து, உண்மையான அதன் தரத்தை புரிந்துக்கொள்ளுங்கள்


விருப்பு, வெறுப்பு அற்றநேர்மையாக உங்கள் திரைப்படங்களை அணுகுங்கள். குறைந்த பட்சம் உங்களுக்காவது நேர்மையாக இருங்கள். உங்களுக்கு எது தெரிந்திருக்கிறது, எது தெரிந்திருக்கவில்லை என்பதை புரிந்துக்கொண்டு, அதனை வளர்த்துக்கொள்ளுங்கள்


திறமையும், அனுபவமும் மட்டுமே வெற்றிக்கானகுறுக்குவழி. மற்றவை எல்லாம்அதிகசெலவுபிடிப்பவை.


போலவேஉங்களுடையதொழில்நுட்பக்குழுவையும் தேர்ந்தெடுங்கள். அவர்களுடைய அனுபவத்தையும், திறமையை கணக்கில் கொள்ளுங்கள். உங்களோடான  நட்பும், நெருக்கமும் மட்டும் போதாது. பெரும்பாலும் அதுஉங்கள் தோளின் மீது ஏற்றப்பட்ட பாரங்களாகமாறிவிட வாய்ப்புகள் அதிகம்


பொதுவாகவே


வெற்றி என்பது சுலபத்தில் வருவதில்லை என்பதை நாம் அறிவோம்

திரைப்பட வெற்றி என்பதுஅவ்வளவுசுலபத்தில் வருவதில்லை.’


குறு முதலீட்டுத் திரைப்படங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்பம், கருவிகளைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.


(தொடரும்)


#Cinema  #tamilcinema  #movies  #MovieMaking  #filmmaking  #expenses #filmexperience #vijayarmstrong 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,