முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கூழாங்கல்: திரைப்படத்தை முன்வைத்து (03)



பொதுவாக எவ்வித தொழிநுட்பத்திலும், service sector-இலும், குறிப்பாக Software, UI/UX பயன்பாடுகளில் இவ்வார்த்தைகளை நாம் கேட்டு இருக்க முடியும்… ‘Think About Users, Keep It Simple, User-Friendliness and Customer Satisfaction’.


இதற்கு பொருள், உன்னுடையபயன்பாட்டாளனை திருப்திப்படுத்துஎன்பதுதான். என்னைக்கேட்டால், அது எல்லாத்துறைக்கும் பொருந்தும் என்றுதான் சொல்வேன். நீங்கள் எத்தனை உயர்ந்த ஒன்றைப் பற்றிப்பேசினாலும் சரி, படைத்தாளும் சரி, அது அவனுக்கு புரியவேண்டும், பயன்படவேண்டும். திரைப்படங்களுக்கும் இது பொருந்தும், பொருந்தவேண்டும் என்பதுதான் என் விருப்பம். காரணம் எந்த படைப்பிற்கும் அடிப்படைநுகர்வோர்தானே..!?


ஏன் ஒரு பார்வையாளன், திரைப்படங்களை புரிந்துக்கொள்ள (ஓரளவிற்கு மேல்) எவ்வித சிரத்தையும் எடுப்பதில்லை என்றால், குறிப்பிட்ட திரைப்படத்தை அவன் பார்க்க நினைத்த, அவனுடைய ஆதாரமான நோக்கத்திற்கு எதிராக இருப்பதுதான். அது என்ன ஆதார நோக்கம்? வேறென்னசுவாரசியமாகபொழுதை கழிப்பதுதான்


அது வரலாறாக, வாழ்வியலாக, புனையப்பட்ட கதையாக என்று எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், அதன் ஆதார நோக்கம் சுவாரசியமாக இருப்பது. அப்போதுதான் பார்வையாளன் பின் தொடர முடியும். அது இல்லாத போது, அப்படைப்பிலிருந்து பார்வையாளன் விலகிவிடுகிறான். அதற்கு மேல் அவனுக்கு பொறுமை இருப்பதில்லை.


நீங்கள் முனைவர் பட்டம், மாஸ்டர் டிகிரி என எதைவேண்டுமானாலும் முயலுங்கள், வாங்கி இருங்கள்உங்களிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள், படைப்புகள், கண்டுபிடிப்புகள், சராசரியாக எல்லோருக்கும் புரியவேண்டுமென்பதில்லை, குறைந்த பட்சம் அத்துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்காவது புரியவேண்டும், பயன்பட வேண்டும்


சரி, விடுங்கள். நான் சொல்லவருவது என்னவென்றால்புரிகிற மாதிரி படம் எடுங்கள், புரிகிற மாதிரி எழுதுங்கள், புரிகிற மாதிரி பேசுங்கள், பயன்படுகிற மாதிரி தயாரிங்கள்அவ்வளவுதான்.


கூழாங்கல் திரைப்படத்திற்கு வருவோம்


இது ஒரு கலைப்படம். அதாவது வாழ்வியலைப் பேசும் படம். ஒரு வரண்ட பூமியின் மனிதர்களை, அவர்களின் குணநலன்களை, அவர்களின் துயரத்தை எதார்த்தம் குலையாமல் காட்சிப்படுத்தியிருக்கிறப்படம்


கோபம் கொண்ட தந்தை, எங்கே தன் அம்மாவை கொன்றுவிடுவாரோ என்று கலங்கும் ஒரு சிறுவனின் கதை. தன் தந்தை, அம்மாவை சந்தித்து விடுவதை தம்மால் முடிந்தவரை தடுக்க நினைக்கிறான். சந்தித்துவிட்டால், அம்மாவை கொன்றுவிடுவார் என்ற பயம். இரு ஊர்களை இணைக்கும், ஒரு பாதையும், அதன் வரண்ட பூமியும்தான் கதை களம். அந்த நடை பயணத்தில் நிகழும் அப்பாவிற்கும் மகனிற்கு இடையேயான சம்பவங்களே கதை


இதை கேட்கும்போது, உங்களுக்குள் உண்டாகும் கற்பனையே, இது ஒரு சுவாரசியமான திரைப்படமாவதற்கு ஏற்ற களம் என்று தோன்றுமே…! ஒரு வெகுசன திரைப்படத்திற்கானகதைக் கருஇது. இதை வைத்துக்கொண்டு மிக சுவாரசியமான ஒரு திரைப்படத்தை எடுத்துவிட முடியும். ஆனால் இதன் இயக்குநர், ஒரு கலைப்படத்தை எடுத்திருக்கிறார்.


ஆம். இது சுவாரசியமான படம்தான். ஆனால் யாருக்கு?


நீங்கள் கலைப்படங்களை பார்த்து பழகியவராக இருக்க வேண்டும். கொஞ்சம்கொஞ்சம் என்ன கொஞ்சம்கூடதலாகவே ஒரு திரைப்படத்தை புரிந்துக்கொள்ள மெனக்கெடுபவராக, சிரத்தை உடைபவராக இருக்க வேண்டும்


காரணம், இத்திரைப்படத்தில் உங்களை மகிழ்விக்கும் பாடல்கள் இல்லை, சண்டைக்காட்சிகள் இல்லை, பன்ச் டயலாக் இல்லை அவ்வளவு ஏன்கதாநாயகி கூட இல்லை


ஆனால்


அற்புதமான நடிப்பு இருக்கிறது

அற்புதமான திரைப்படமாக்கம் இருக்கிறது

கடின உழைப்பு இருக்கிறது

தேர்ந்த திரைமொழி இருக்கிறது

வரண்ட பூமியின் மண்மனம் இருக்கிறது

அரசியல் இருக்கிறது

மனித மனம் இருக்கிறது

மனிதத்துயர் இருக்கிறது

வாழ்வு இருக்கிறது


இதுபோதும் என்றால், இது உங்களுக்கான திரைப்படம். நமக்கான திரைப்படம். மக்களுக்கான திரைப்படம்.


படம் பார்த்துவிட்டு வாருங்கள்மேலும் பேசுவோம்.



பின்குறிப்பு: SonyLiv OTT தளத்தில் இருக்கிறது.


#koozhangalmovie #koozhangalthemovie #tamilcinema #tamil #cinema #movies #vijayarmstrong #கூழாங்கல் #கூழாங்கல்திரைப்படம் 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,