முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 02)


1888-இல் துவங்கப்பட்ட கொடாக் நிறுவனம்நூற்றாண்டு கடந்தும் பல புகைப்படக்காரர்களின் விருப்பத்திற்குரியதாக இருந்திருக்கிறதுசொல்லப்போனால் பல புகைப்படக்காரர்களை உருவாக்கியதே அதுதான் எனலாம்புகைப்படம் எடுக்கும் பழக்கத்தை நமக்கு ஏற்படுத்தியதே கொடாக் தான்அது கண்டுபிடித்த படச்சுருள் தான் புகைப்படம் பிடித்தலை உலகத்தாரிடையே பரப்பியதுஅதிகரிக்கச்செய்தது.

முதல் படச்சுருள்முதல் கேமராமுதல் டிஜிட்டல் கேமரா என அது கண்டுபிடித்த பல 'முதல்'கள் உலகெங்கும் பிரபலம்புகைப்படம் பிடித்தலை எல்லாருக்குமானதாக மாற்றிக் காட்டியது அதன் பெரும் சாதனை

1885-இல் 'roll of Eastman’s photo plates'- கண்டுபிடித்ததிலிருந்து பல நிலைகளை கடந்து 1889-இல் மக்கள் பயன்பாட்டிற்கான படச்சுருளை அந்நிறுவனம் தயாரிக்கத் துவங்கியதுஅப்படச்சுருள் தான் திரைப்படம் என்னும் கலை உருவாக காரணமாக இருந்தது என்பதையும் இங்கே நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

எடிசனின் (Thomas Edison) 'Kinetoscope' என்னும் கருவியும்கொடாக்கின் படச்சுருளும் சேர்ந்து திரைப்படம் என்னும் கலையை/துறையை உருவாக்கியது என்பது தனிக் கதை .



1900-இல் கொடாக் நிறுவனத்தின் முதல் கேமரா ‘Kodak Brownie’ அறிமுகப்படுத்தப்பட்டதுஅட்டையால் (cardboard) ஆன ஒரு பெட்டி அதுஅதில் ஒரு லென்சும்ஷட்டரும் இணைக்கப்பட்டிருந்தது. ‘நீங்கள் பொத்தானை அழுத்துங்கள்மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ (You press the button, we do the rest) என்ற விளம்பர வாசகத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட இக்கேமராவில் 'paper film' படச்சுருள் இணைக்கப்பட்டிருந்ததுஅதைப்பயன்படுத்தி நூறு புகைப்படங்களை எடுக்கலாம்புகைப்படம் எடுத்தவுடன் கேமராவையே கொடாக் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும்



அங்கே அவர்கள் கேமராவில் இருக்கும் படச்சுருளை எடுத்து டெவலப் செய்தும்மாற்றுப் படச்சுளை கேமராவில் இணைத்தும் கொடுப்பார்கள்இக்கேமராவே 'Amateur Photography'-இன் துவக்கமாக இருந்தது.

அங்கே துவங்கிய கொடாக்கின் வெற்றிப் பயணம்உலகின் மூலை முடுக்கு எல்லாம் போய்ச் சேர்ந்ததுஉலகம் புகைப்படங்களை எடுத்துத் தள்ளியதுகொடாக் பெரும் பணம் பார்த்தது.

1935-இல் 'Kodachrome' என்னும் வண்ணப் படச்சுருளை கொடாக் நிறுவனம் கண்டுபிடித்து புழக்கத்திற்கு கொண்டுவந்ததுவண்ணமயமான உலகத்தை சிறைபிடிக்கும் ஒரு தொழில்நுட்பத்தை கண்டு உலகம் அதிசயத்ததுகொடாக் எல்லோருடைய இதயங்களிலும் இடம் பிடித்ததுஇதுவும் பெரும் வெற்றியை அடையவேஅப்படச்சுருள் 8mm, 16mm, 35mm, 120, 116, 828 என எல்லா format-லும் அறிமுகப்படுத்தப்பட்டது.  தொடர்ந்து 74 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த 'கொடாக் குரோம்படச்சுருள் 2009-இல் தயாரிப்பு நிறுத்தப்பட்டதுகாரணம் என்ன என்பதை நாம் அறிவோம்ஆம்உலகம் டிஜிட்டல் மயமாகிவிட்டது.

சரி ஒரு புகைப்படக் கேமரா எப்படி வேலை செய்கிறது என்பதையும் புரிந்துக்கொள்ளுவோமா..!

ஒரு புகைப்படக் கேமராஅடிப்படையாக மூன்று உறுப்புகளைக் (Element) கொண்டது

1. லென்ஸ் - Optical Element
2. படச்சுருள் - Chemical Element
3. கேமரா என்ற அமைப்பு(Camera Body) - Mechanical Element.   

இம்மூன்று உறுப்புகளை ஒருங்கிணைத்து தெளிவான பிம்பங்களைப் பதிவு செய்வதே ஒரு கேமராவிற்கு பின்னிருக்கும் தொழில்நுட்பமாகும்



அடிப்படையில் கேமரா என்பது ஒளியை பதிவு செய்யும் ஒரு கருவிஒரு பொருள் அல்லது நபரின் மீது விழும் ஒளியானது பிரதிபலிப்பதனால் தான் நாம் அவற்றைப் பார்க்க முடிகிறதுஅப்படி பிரதிபலித்து வரும் ஒளியை ஒருங்கிணைத்து தெளிவாக பதிவு செய்யவே லென்ஸ் பயன்படுகிறதுலென்ஸின் வழி ஊடுருவி வரும் ஒளியை படச்சுருள் (Film) எனப்படும் வேதிப்பொருட்கள் பூசப்பட்ட மெல்லிய பட்டைதன் மீது விழும் ஒளியைப் பொறுத்து வேதிவினை புரிந்து ஒளியைப் பதிவு செய்கிறதுஇப்படச்சுருள் மீது வேறு ஒளிகள் விழாவண்ணம் அது இருக்கும் அறை இருட்டாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. (ஆரம்பக்காலங்களில் இந்த படச்சுருளுக்கு பதிலாக வேதிப்பொருட்கள் பூசப்பட்ட தகடு அல்லது கண்ணாடியை பயன்படுத்தினார்கள்லென்ஸின் வழி ஊடுருவி வரும் ஒளியானது படச்சுருளின் மீது விழும்போது மட்டும்விலகி வழி விட ஒரு தடுப்பு இருக்கிறதுஇத்தடுப்புதான் ‘ஷட்டர்’ (Shutter) என்று அழைக்கப்படுகிறதுஇந்த ஷட்டர் தடுப்பு எவ்வளவு நேரம் விலகி வழி விடவேண்டும் என்பதை நிர்ணயிக்கத் தேவையான அமைப்பும் கேமராவில் இருக்கிறதுஅதே போல லென்ஸின் வழி எவ்வளவு ஒளி ஊடுருவி வரலாம் என்பதை நிர்ணயிக்கவும் ஒரு அமைப்பு உண்டுஇவ்வமைப்பு ‘அப்பார்ச்சர்’ (Aperture) என்று அழைக்கப்படுகிறது



நாம் படம் பிடிக்க விரும்பும் காட்சியைநாம் பார்ப்பதற்கென்று ஒன்றும்பதிவு செய்வதற்கென்று ஒன்றும் என இரண்டு லென்ஸுகள் கொண்ட கேமராக்களை ஆரம்பக் காலங்களில் பயன்படுத்தினார்கள்இவற்றை ‘Twin-lens reflex Camera’ என்றார்கள்பிறகுலென்ஸுக்கும் படச்சுருளுக்கும் இடையே ஒரு கண்ணாடியை சாய்வாக அமைத்துலென்சில் இருந்து வரும் ஒளியை திசைதிருப்பி அதை ஒரு பட்டகம் (Roof Pentaprism) மூலம் நாம் பார்ப்பதற்கு வழிவகை செய்தார்கள்பிம்பத்தை பதிவு செய்ய ஷட்டரை திறக்கும்போது உள்ளே இருக்கும் கண்ணாடி மேல் நோக்கி நகர்ந்து ஒளியை படச்சுருளில் விழச்செய்யும்இப்படி ஒரு கண்ணாடி அமைத்துஒளியை பிரதிபலிக்க செய்வதனால் ஒரு லென்சே போதுமானதாக இருக்கிறதுஆகையால் இவ்வகை கேமராவை ‘Single-lens reflex camera’ என்கிறார்கள்தற்போதைய டிஜிட்டல் கேமராவில் (Digital single-lens reflex camera) படச்சுருளுக்கு பதில் சென்சார்(Image Sensor) பிம்பத்தை பதிவுசெய்கிறதுஅவ்வளவுதான்.

இது ஒரு எளிய தொழில்நுட்பம்தான்இதனை அடிப்படையாக கொண்டு எத்தனை வகையான கேமராக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றனஎத்தனை நிறுவனங்கள் இதில் பங்கு பெற்றிருக்கின்றனஎத்தனை உழைப்பும்சிந்தனையும் இதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிய வரும்போது நமக்கு கிடைக்கும் பிரமிப்பு இருக்கிறதே..! அடடா.. அதை சொல்லில் வடிக்க முடியாதுநேரில் கண்டு உணர வேண்டும்உங்களுக்கு அதில் ஆர்வமும், விருப்பம் இருக்கிறதா..!? இருக்கிறது எனில் நீங்கள் போக வேண்டிய இடம் ‘DR. ARUN’S PHOTOGRAPHY AND VINTAGE CAMERA MUSEUM’. சென்னை கோவலத்தில் தான் அவ்விடமிருக்கிறது

Dr.A.V.அருண் அடிப்படையில் பல் மருத்துவராக இருப்பினும்புகைப்படக்கலையின் மீதிருக்கும் தன் ஆர்வத்தினால்இந்த மியூசியத்தை அமைத்திருக்கிறார்ஆதிகாலத்து கேமராவிலிருந்து இன்றைய நவீன கேமரா வரைகாட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறதுஒவ்வொரு கேமராவைப்பற்றியும், தகவல்கள் அதன் அருகிலேயே எழுதியும் வைக்கப்பட்டிருக்கிறதுஉங்களுக்கு ஆர்வமும் நேரமும் இருந்தால்ஒரு நாள் முழுவதையும் நீங்கள் அங்கே செலவிடலாம்.  புகைப்படமென்னும் இக்கலையின் உண்ணதத்தைஅதன் வரலாற்றுச் சுவடைஅது கடந்து வந்த பாதையை அங்கே நீங்கள் கண்டு களிக்கலாம்

பாக்ஸ் கேமராக்கள்டிவைன் லென்ஸ் கேமராக்கள்போலராய்ட் கேமராக்கள்போர் காலத்தில் பயன்படுத்திய கேமராக்கள், 3D கேமராக்கள்உளவாளிகள் பயன்படுத்தி சிறிய வடிவ கேமராக்கள்விமானங்களில் பயன்படுத்திய கேமராக்கள்விடியோ கேமராக்கள், 8MM கேமராக்கள்ஆளுயர கேமராக்கள் என ஆதி முதல் அந்தம் வரை கேமராக்களின் அத்தனை வகைகளையும் அங்கே நீங்கள் கண்டு ரசிக்கலாம்பல நூறு கேமராக்கள் (1700) காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறதுபுகைப்படம்ஒளிப்பதிவுதிரைத்துறை என ஆர்வமிருக்கும் அத்துனை பேரும் தவறாமல் சென்று வர வேண்டிய இடம் அது


தொடரும்...

புகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 01)
புகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 03)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...